நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் கிட்டதட்ட 57 பேரை நாய் கடித்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

நாம் தமிழர் கட்சியும், அதன் தலைவரான சீமான் குறித்தும் அடிக்கடி போலிச்செய்திகள் உருவாவது வழக்கம். அவ்வகையில், “நாம் தமிழர் கட்சிப் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 57 பேர் மருத்துவமனையில் அனுமதி” என்பதாக செய்திப்புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சிறைக்கு பயமெனில் விஷம் குடித்து சாவுங்கள் என்றாரா சீமான்?
Fact check/Verification
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் 57 பேரை நாய் கடித்தது என்று பரவும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
உண்மையில், புதியதலைமுறையின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் அப்படி ஏதேனும் செய்தி வந்திருக்கிறதா என்று தேடியபோது கடந்த 26 ஆம் தேதியன்று வெளியான செய்தி ஒன்று ட்விட்டரில் பகிரப்பட்டிருந்தது.
அதில், “நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 57 பேர் மருத்துவமனையில் அனுமதி” என்கிற செய்தி வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைப் பகுதிகளில் சுற்றித்திரிந்த தெருநாய்களில் சில ஒருநாள் 37 பேரையும், மறுதினம் 20 பேர் என்று 50க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளன. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட அச்செய்தியையே ஸ்க்ரீன் ஷாட் அடித்து, எடிட் செய்து நாம் தமிழர் கட்சிக் கூட்டம் நடைபெற்ற இடத்தில் 57 பேரை நாய் கடித்தது என்பதாகப் பரப்பி வருகின்றனர் என்பது நமக்கு உறுதியானது.
Conclusion:
நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தில் 57 பேரை நாய் கடித்தது என்று பரவும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources
Puthiyathalaimurai Digital team
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)