Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சிறைக்கு பயமெனில் விஷம் குடித்து சாவுங்கள் என்று சீமான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமீப காலங்களில் பல காரங்களுக்காக யூடியூபர்கள் பலர் கைதாவது தொடர் சம்பவமாகி வருகின்றது. பப்ஜி மதன், கிஷோர் கே சுவாமி, மாரிதாஸ் இவர்கள் வரிசையில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளரான சாட்டை துரைமுருகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் காஞ்சிபுரத்திலுள்ள தனியார் தொழிற்சாலை குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகவும் , காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாகவும் கூறப்படுகின்றது
இந்நிலையில், “சிறைதான் சிந்தனையைச் செதுக்கும் பட்டறை. தொண்டர்களை பிணையெடுப்பது மட்டுமே கட்சியின் பணியல்ல. சிறைக்கு செல்ல பயமெனில் விஷத்தை குடித்து சாவுங்கள்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Also Read: திமுகவை எதிர்ப்பதற்கு திருமாவளவனுக்கு தைரியம் இல்லை என்றாரா வன்னி அரசு?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
சிறைக்கு பயமெனில் விஷம் குடித்து சாவுங்கள் என்று சீமான் கூறியதாக தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதா என அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் தந்தி தொலைக்காட்சியில் இவ்வாறு ஒரு செய்தி வந்ததற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சி டிஜிட்டல் துறை பொறுப்பாளர் வினோத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்துக் கேட்டோம்.
அதற்கு அவர்,
“இது பொய்யானது, இவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை”
என்று தெளிவுப்படுத்தினார்.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானது என மறுப்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பாக்கியராஜன் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். அவரும் இத்தகவல் பொய்யானது என உறுதிப்படுத்தினார்.
Also Read: பேச்சாளர்களுக்கு முந்திரி, இறைச்சி வாங்க நிதி கேட்டதா நாதக?
சிறைக்கு பயமெனில் விஷம் குடித்து சாவுங்கள் என்று சீமான் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Packiarajan, PRO, Naam Tamilar Katchi
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 1, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 28, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 5, 2025