வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkதமிழ்நாடு சட்டமன்ற விவகாரம் தொடர்பாக குடியரசுத்தலைவரை ஆளுநர் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

தமிழ்நாடு சட்டமன்ற விவகாரம் தொடர்பாக குடியரசுத்தலைவரை ஆளுநர் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

தமிழ்நாடு சட்டமன்ற விவகாரம் தொடர்பாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தாகப் புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Screenshot from Twitter @ashok777_kalam

“தரமான சம்பவம் இருக்கா கோபாலபுரத்துக்கு” என்கிற பதிவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவைச் சந்திக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வருகின்றனர்.

Screenshot from Facebook/Srinivas

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஜனவரி 18ஆம் தேதியன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதா தமிழ்நாடு அரசு?

Fact check/Verification

தமிழ்நாடு சட்டமன்ற விவகாரம் தொடர்பாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்ததாகப் பரவுகின்ற புகைப்படம் குறித்த உண்மையறிய அதனை ஆய்வு செய்தோம்.

சட்டமன்ற விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத்தலைவரை சந்தித்தாரா என்பது தொடர்பாக ஆராய்ந்தபோது அதுகுறித்து செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால், ”ஆளுநர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினின் மனுவை திமுக சார்பிலான குழு குடியரசுத் தலைவரிடம் அளித்தது.” என்கிற திமுக குறித்த செய்தி மட்டுமே வெளியாகியிருந்தது.

தொடர்ந்து, வைரல் பதிவில் உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, கடந்த ஆகஸ்ட் 06, 2022 அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத்தலைவரை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அப்புகைப்படம் ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnrajbhavan.gov.in பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. ராஜ்பவன் ட்விட்டர் பக்கத்திலும் அப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இதிலிருந்து, வைரலாகும் புகைப்படம் சமீபத்திய புகைப்படம் அல்ல; ஆளுநர் தற்போது குடியரசுத்தலைவரை சந்திக்கவில்லை; இது ஆகஸ்ட் 06, 2023 அன்று எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது.

Also Read: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தமிழ்நாடு ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தாரா?

Conclusion

தமிழ்நாடு சட்டமன்ற விவகாரம் தொடர்பாக குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்ததாகப் பரவுகின்ற புகைப்படம் கடந்த ஆகஸ்ட் 2022ல் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources
Twitter Post, From RAJ BHAVAN, TAMIL NADU, Dated August 06, 2022
Twitter Post, From President of India, Dated January 12, 2023
Event Gallery From, www.tnrajbhavan.gov.in, Dated August 06, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular