திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkகொரோனா பரவலால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் முழு ஊரடங்கு என்று பரவும் வதந்தி!

கொரோனா பரவலால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் முழு ஊரடங்கு என்று பரவும் வதந்தி!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim ஞாயிறு முழு ஊரடங்கு குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை Fact வைரலாகும் தகவல் தவறானதாகும். கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான செய்தி வீடியோவே தற்போது வைரலாகிறது.

கொரோனா பரவலால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கவிருப்பதாக தகவல் என்று செய்தி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கொரோனா

“தமிழகத்தில் முழு ஊரடங்கு” என்கிற தகவலுடன் செய்தி அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Screenshot from Facebook/anjanamedia
கொரோனா
Screenshot from Facebook/Harris.vicky.90
Screenshot from Facebook/aravindias

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நடிகை மற்றும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ராகுல் காந்திக்கு ஆதரவாக ட்வீட் எனப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Factcheck / Verification

கொரோனா பரவலால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் அதுகுறித்த உண்மையறிய ஆய்வில் ஈடுபட்டோம்.

“தமிழகத்தில் முழு ஊரடங்கு” என்கிற பதிவுடன் வைரலாகிய வீடியோ தந்தி டிவி வெளியிட்டது என்பதால் அவர்களுடைய அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஆராய்ந்தோம்.

அப்போது, வைரலாகும் தகவலில் இடம்பெற்றுள்ள வீடியோ, தந்தி டிவியால் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி என்பது நமக்கு உறுதியானது. அந்த வீடியோவை இங்கே இணைத்துள்ளோம். தமிழகத்தில் தற்போது வரை புதிய ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வைரலாகும் வீடியோவில் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கான நகைச்சுவை என்று இறுதியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், பலரும் இதை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

Conclusion

கொரோனா பரவலால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources YouTube Video From, Thanthi Tv, Dated January 05, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular