Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: கேரள வந்தே பாரத் ரயிலில் ஒழுகும் ஓட்டுநர் கேபின் மேற்கூரை
Fact: வைரலாகும் புகைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
கேரள வந்தே பாரத் ரயிலின் ஒழுகிய மேற்கூரை என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
பிரதமர் மோடி கடந்த செவ்வாய் அன்று தொடங்கி வைத்த கேரளா வந்தே பாரத் ரயில் பெட்டிக்குள் மழைநீர் ஒழுகியதாக செய்திகள் வெளியாகியது.
இந்நிலையில், “நேற்று மோடியால் திறந்து வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் இன்றைய பரிதாபங்கள்” என்று அச்செய்தி தொடர்பாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சன்னி லியோனுக்கு கூடிய கூட்டத்தை அண்ணாமலைக்கு கூடியதாக பரப்பும் இணையவாசிகள்!
கேரள வந்தே பாரத் ரயிலின் ஒழுகிய மேற்கூரை என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
கேரள வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்ட மழைநீர் கசிவு குறித்த செய்திகளை கீ-வேர்டுகள் மூலமாக ஆராய்ந்தபோது, பயணிகள் பெட்டியில் மழைநீர் ஒழுகியதாகவே செய்திகள் தெரிவித்திருந்தன. திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு சென்ற வந்தே பாரத்தின் முதல் பயணத்தில் இந்த கசிவு ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவித்திருந்தன.
தொடர்ந்து, வைரலாகிய புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஆகஸ்டு 10, 2017ல் வெளியான Story Pick செய்தி ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில் Sucheta Dalal என்பவரது ட்வீட்டில் வைரலாகும் புகைப்படத்தின் வீடியோவே இடம் பெற்றிருந்தது. குறிப்பிட்ட வீடியோ Dhanbad, ஜார்க்கண்ட்டில் எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Janasatta வெளியிட்டிருந்த ஆகஸ்டு 08, 2017 செய்தியிலும் வைரலாகும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
இதுகுறித்த மேலும் சில செய்திகளை இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள். பிரதமர் மோடி 2019ஆம் ஆண்டில்தான் முதல் வந்தே பாரத் ரயிலை துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி என்று பரவும் போலி பிபிசி கருத்துக்கணிப்பு!
கேரள வந்தே பாரத் ரயிலின் ஒழுகிய மேற்கூரை என்று பரவும் புகைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report By The Hindu, Dated April 26, 2023
Article By Story Pick, Dated August 10, 2017
Report By Jansatta, Dated August 8, 2017
Report By Punjabi Kesari, Dated August 8, 2017
(இச்செய்தி கட்டுரை நியூஸ்செக்கர் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
May 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 25, 2025
Vijayalakshmi Balasubramaniyan
December 17, 2024