ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkபணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக பரவும் தவறான வீடியோ!

பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக பரவும் தவறான வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக பரவும் வீடியோ!

Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு ஜனவரி மாதத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு முன்பு நடந்ததாகும்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் நிலையில், பஞ்சாப் டில்லி பார்டரில் அமர்ந்து தர்ணா செய்ய மாத சம்பளத்தை புரோக்கர்கள் ரூ35000 பேச, விவசாயி ரூ.40,000 கேட்க… உனக்கு இங்கு சாப்பாடு, தண்ணி,வசதி தருவோம் அங்கு உன் வயலில் ஆட்கள் வேலை செய்வர். ஏன் எதற்கு ரூ.40,000 என விவாதம். புரோக்கர் விவசாயி கழுத்தை பிடிக்கிறான்… இது என்ன ?என்று குறிப்பிட்டு வீடியோஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக பரவும் வீடியோத்தகவல்

X Link | Archived Link

பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக பரவும் வீடியோத்தகவல்

Archived Link

பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக பரவும் வீடியோத்தகவல்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விவசாயிகள் போராட்டக்களத்தில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவதாகப் பரவும் தவறான வீடியோ செய்தி!

Fact Check/Verification

பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் jatt_zimidar_vlog எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோவானது ‘ਦੇਖੋ ਕਿਵੇਂ ਹੋ ਰਿਹਾ ਸੌਦਾ ਟਰੈਕਟਰ ਦਾ’ என்று குறிப்பிட்டு ஜனவரி 17, 2023 அன்று பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அதை தமிழில் மொழிப்பெயர்த்தால் “டிராக்டர் ஒப்பந்தம் எப்படி நடக்கிறது என்று பாருங்கள்” என்பதே பொருளாக வரும்.

பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக பரவும் வீடியோத்தகவல்

தொடர்ந்து தேடுகையில் guddiyan_patole எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஜனவரி 18, 2023 அன்று இதே வீடியோ, இதே தலைப்புடன் பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக பரவும் வீடியோத்தகவல்

நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் இம்மாதம் (பிப்ரவரி) 13 ஆம் தேதியே தொடங்கியது. ஆனால் வைரலாகும் இவ்வீடியோவோ கடந்த மாதமே சமூக ஊடகங்களில் பரவி வருவதை காண முடிகின்றது. இதனைடிப்படையில் பார்க்கையில் இவ்வீடியோவிற்கும் விவசாயிகள் போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது ஊர்ஜிதமாகின்றது.

வைரலாகும் வீடியோவில் காணப்படும் வாக்குவாதம் டிராக்டர் விற்பனையின்போது ஏற்பட்டது என்பது அதில் பேசப்படும் உரையாடல்களின் வாயிலாகவும், அப்பதிவுக்கு போடப்பட்டுள்ள கமெண்ட்களின் வாயிலாக உறுதி செய்ய முடிகின்றது

 Also Read: மனித முகத்துடன் கராஞ்சியின் சம்சாரா ஏரியில் காணப்படும் மீன்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Conclusion

பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவானது விவசாயிகள் போராட்டத்திற்கு முந்திய பழைய வீடியோவாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடம் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Instagram post from the user, @jatt_zimidar_vlog, Dated Jan 17, 2024
Instagram post from the user, @guddiyan_patole, Dated Jan 18, 2024
Report from Kumudam, Dated Feb 13, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular