வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkதீண்டாமை காரணமாக ஆற்றில் குளித்த இளைஞர்களை அடித்து விரட்டிய அந்தணர்; வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

தீண்டாமை காரணமாக ஆற்றில் குளித்த இளைஞர்களை அடித்து விரட்டிய அந்தணர்; வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ஆற்றில் குளித்த இளைஞர்களை தீண்டாமை காரணமாக அந்தணர் ஒருவர் அடித்து விரட்டியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஆற்றில் குளித்த இளைஞர்களை தீண்டாமை காரணமாக சாது ஒருவர் அடித்து விரட்டியதாக பரவும் தகவல்

“அலகாபாத்தில் சுற்றுலா வந்து குளித்தவர்களிடம் நீங்கள் என்ன ஜாதி என்று கேட்டிருக்கிறார். அப்பாவியாக தங்கள் ஜாதியைச் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு நடந்தது இந்த காணொளியில் உள்ளது”  என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

ஆற்றில் குளித்த இளைஞர்களை தீண்டாமை காரணமாக சாது ஒருவர் அடித்து விரட்டியதாக பரவும் தகவல் - 1

Twitter Link | Archive Link

ஆற்றில் குளித்த இளைஞர்களை தீண்டாமை காரணமாக சாது ஒருவர் அடித்து விரட்டியதாக பரவும் தகவல் - 2

Facebook Link

ஆற்றில் குளித்த இளைஞர்களை தீண்டாமை காரணமாக சாது ஒருவர் அடித்து விரட்டியதாக பரவும் தகவல் - 3

Facebook Link

Also Read: சவுதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்றாரா அண்ணாமலை?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

ஆற்றில் குளித்த இளைஞர்களை தீண்டாமை காரணமாக அந்தணர் ஒருவர் அடித்து விரட்டியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து அதன் பின்னணி குறித்து ஆய்வு செய்கையில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் தவறான ஒன்று என்பதை அறிய முடிந்தது.

வைரலாகும் வீடியோவில் இருக்கும் நிகழ்வுக்கும் தீண்டாமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வீடியோவில் காணப்படும் இளைஞர்கள் கங்கை நதியில் மது அருந்தியவாறு குளித்துள்ளனர். இதைக்கண்டு அங்கு வந்த சாது ஒருவர் அவர்களை பிரம்பால் அடித்துள்ளார்.

உண்மை செய்தி
Screenshot of news room article

இந்நிகழ்வு குறித்து ஊடகங்களில் வந்த செய்தியில்  இச்சம்பவம்  உத்தரகாண்டின் ரிஷிகேஷில் நடைப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்

இளைஞர்கள் சம்பவ இடத்தை விட்டு வெளியேறும்போது, அக்கூட்டத்தில் ஒருவர் கையில் மது குவளையை எடுத்துக் கொண்டு வெளியேறுவதை காண முடிகின்றது.

மது குவளையை கொண்டு செல்லும் இளைஞர்
Screenshot from Viral video

இதனடிப்படையில் பார்க்கும்போது ஆற்றில் குளித்த இளைஞர்களை தீண்டாமை காரணமாக அந்தணர் ஒருவர் அடித்து விரட்டினார் என்று பரப்பப்படும் தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.

Conclusion

ஆற்றில் குளித்த இளைஞர்களை தீண்டாமை காரணமாக அந்தணர் ஒருவர் அடித்து விரட்டியதாக கூறி பரப்பப்படும் வீடியோ தவறானதாகும்; உண்மையில் அந்த இளைஞர்கள் ஆற்றில் மது அருந்தியதாலேயே அந்த சாதுவால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயமானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False/False Context

Sources

Median Reports from Newsroom, Newsheight, and Zee News Dated 18/05/2022, 17/05/2022, and 18/05/2022 respectively.


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular