வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact Checkபிரதமர் மோடி எவ்வித பாதுகாப்பும் இன்றி கொரோனா வார்டைப் பார்வையிட்டாரா?

பிரதமர் மோடி எவ்வித பாதுகாப்பும் இன்றி கொரோனா வார்டைப் பார்வையிட்டாரா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

பிரதமர் மோடி, பிபிஇ கிட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி கொரோனா வார்டினைப் பார்வையிட்டது போன்ற கருத்துடன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

பிரதமர்
Source: Facebook

தமிழக முதல்வர் ஸ்டாலின், கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு வார்டில் சென்று உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் நோயாளிகளை நலம் விசாரித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள், மக்கள் ஆகியோரிடம் நம்பிக்கை ஏற்படுத்து ஊக்கமளிக்கவே கொரொனா நோயாளிகளைச் சந்தித்தேன்” என்று தெரிவித்திருந்தார்.

மேலும், கோவை மக்கள் முதல்வரின் கோவை விசிட் குறித்து #கோபேக்ஸ்டாலின் என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ததாகவும், ஆனால், அது தமிழகத்திலிருந்து பரப்பப்படவில்லை; போலியாக ட்ரெண்ட் செய்து உருவாக்கப்பட்ட ஹேஸ்டேக் என்றும் ட்விட்டர் அதனை நீக்கியது. கோவை மக்கள் பாஜகவிற்கு வாக்களித்ததைத் தொடர்ந்து அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவது போன்ற பிம்பம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், “இதுதான் நிஜத்துக்கும் நடிப்புக்கும் உள்ள வித்தியாசம்” என்கிற தலைப்பில் பிரதமர் மோடி கொரோனா நோயாளிகளின் அருகில் சென்று பேசியது போலவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறிது தொலைவில் இருந்தே கொரோனா நோயாளிகளிடம் உரையாடிய புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளனர்.

பிரதமர்
Source: Facebook

Facebook Link

பிரதமர்
Source: Facebook

Facebook Link

பிரதமர்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

பிரதமர் மோடி எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மாஸ்க் மட்டும் அணிந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் கண்டதைப் போலவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளைப் பார்வையிட்டதையும் இணைத்து புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து குறிப்பிட்ட புகைப்படம் குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு நடத்தியது உண்மை. பிபிஇ கிட் அணிந்து அவர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளைப் பார்வையிட்டார்.

அதே போன்று, பிரதமர் மோடி இடம்பெற்றிருக்கும் புகைப்படமும் உண்மை. அவர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறுபவர்களைப் பார்வையிட்டார். ஆனால், அவர்கள் கொரோனா நோயாளிகள் அல்ல. கடந்த 2020, ஜூலை மாதம் லடாக் பகுதியில் சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையே நடைபெற்ற தாக்குதலில் காயமுற்ற இந்திய வீரர்களைப் பிரதமர் மோடி பார்வையிட்டார் என்று இந்த புகைப்படம் பகிரப்பட்டு இருந்தது. அன்றைய சூழ்நிலையில், இப்புகைப்படம் குறித்தே பலவித சர்ச்சைகள் எழுந்தன.

Source: Twitter

இந்நிலையில், அதுகுறித்த விளக்கத்தை இந்திய இராணுவ அமைச்சகம் வெளியிட்டிருந்தது. பிரதமர் மோடி, லடாக் பிரச்சினையில் காயமடைந்த வீரர்களைச் சென்று மருத்துவமனையில் பார்வையிட்டது உண்மை என்று அது உறுதி கூறியிருந்தது. ஏ.என்.ஐ போன்ற செய்தி நிறுவனங்கள் இச்செய்தியைப் பகிர்ந்திருந்தன.

பிரதமர்
Source: Hindu
பிரதமர்
Source: FPJ

இந்நிலையில், இப்புகைப்படத்தின் உண்மை அம்சமே திரித்து பிரதமர் மோடி பாதுகாப்பு உபகரணங்களே இன்றி கொரோனா நோயாளிகளைச் சென்று பார்வையிட்டது போன்ற கருத்துடன் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

Conclusion:

பிரதமர் மோடி எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் கண்டதாகப் பரவும் புகைப்படக் கருத்து தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading/Partly False

Our Sources

The Hindu: https://www.thehindu.com/news/national/army-clarifies-on-leh-military-facility-visited-by-pm/article31988243.ece

TFPJ: https://www.freepressjournal.in/india/defence-ministry-rubbishes-malicious-and-unsubstantiated-accusations-of-staged-hospital-for-pm-modis-leh-visit

ANI: https://twitter.com/ANI/status/1279330126480601088?s=20

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular