ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 16, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 16, 2024

HomeFact Checkபிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா?

பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Fact: இத்தகவல் தவறானது என்று பிரசாந்த் கிஷோர் தரப்பும், பாஜக தரப்பும் தெளிவு செய்துள்ளது.

பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல்

X Link | Archive Link

பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல்

Archive Link

பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோவா இது?

Fact Check/Verification

பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் செய்தி வெளியீடு பகுதியில் இதுக்குறித்த எந்த செய்தியும் காணப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து பாஜக செய்தி தொடர்பாளர்கள் பக்கத்தில் ஆய்வு செய்கையில் அனில் பலூனி என்பவர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.

பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல்
Screengrab from BJP website

இதனையடுத்து பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங்கை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு வைரலாகும் அறிக்கை குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் இந்த அறிக்கை போலியானது என்று உறுதி செய்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவும் இந்த தகவல் பொய்யானது என்று நமக்கு தெளிவு செய்தார்.

இதனையடுத்து தேடுகையில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் இந்த அறிக்கை போலியானது என்றும், இந்த அறிக்கையை காங்கிரஸ் கட்சி பரப்புவதாக குற்றம் சாட்டியும் பதிவு ஒன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்  பார்க்கையில் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் அறிக்கை போலியானது என்பது தெளிவாகின்றது.

Also Read: மகாலட்சுமி திட்டம் குறித்து காங்கிரஸ் வெளியிட்ட விளம்பர வீடியோவா இது?

Conclusion

பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும். இந்த தகவலை பாஜக தரப்பும் பிரசாந்த் கிஷோர் தரப்பும் உறுதி செய்துள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet by Jan Suraaj on 22nd May 2024
Telephonic conversation with BJP General Secretary Arun Singh
Telephonic conversation with Tamilnadu BJP State Secretary S.G.Suryah

(இந்த செய்தியானது நியூஸ்செக்கர் பெங்காலியில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது)


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular