சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkஅனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை சாத்தியமில்லை என்றாரா பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்?

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை சாத்தியமில்லை என்றாரா பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஞாயிறன்று திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் பேசிய பரப்புரையில் பெண்களுக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

இந்நிலையில், “எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் தருவது நியாயமாக இருக்காது. முதல்வர் தகுதியுடையவருக்கு மட்டுமே 1000 ரூபாய் தர ஏற்பாடு செய்வோம் என்றுதான் சொல்லி இருக்கார்” என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 1

Facebook Link

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதயநிதியைப் பிடித்து மக்கள் தொங்குவது நியாயம் இல்லை என்றாரா துரைமுருகன்?

Fact Check/Verification

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை சாத்தியமில்லை என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்த நியூஸ்கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் தந்தி தொலைக்காட்சி வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையினரை தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். இதற்கு அவர்கள், ”இது பொய்யான நியூஸ்கார்ட், இதை நாங்கள் வெளியிடவில்லை.” என்று விளக்கமளித்தனர்.

இதனையடுத்து பிடிஆர் பழனிவேல் ராஜன் தரப்பைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டதற்கு, அவர்களும் இத்தகவல் பொய்யானதுதான் என்பதை உறுதி செய்தனர்.

Also Read: மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா?

Conclusion

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை சாத்தியமில்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Thanthi TV


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular