சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkகோவிலில் குண்டு வைக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கோவிலில் குண்டு வைக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கோவிலில் குண்டு வைப்பதற்காக ஏவி விடப்பட்ட ஆர் எஸ் எஸ் தீவிரவாதி பெங்களூரில் கைது

Fact: வைரலாகும் புகைப்படம் எகிப்தில் எடுக்கப்பட்டதாகும்.

கோவிலில் குண்டு வைக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”கோவிலில் குண்டு வைப்பதற்காக ஏவி விடப்பட்ட ஆர் எஸ் எஸ் தீவிரவாதி பெங்களூரில் கைது” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.

கோவிலில் குண்டு
Screenshot from X @Magaraja2021

Archived Link

Screenshot from X @dravidanstock2k

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.  

Also Read: பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் சிரியா வீடியோ!

Fact Check/Verification

கோவிலில் குண்டு வைக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அப்புகைப்படம் எகிப்தை சேர்ந்தது என்பதை நம்மால் அறிய முடிந்தது.

அரேபிய மொழி செய்தி ஊடகமான sharkiatoday இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில் எகிப்து கெய்ரோ நகரில் கடந்த 2017ஆம் ஆண்டு, ஆகஸ்டு 25 அன்று வெளியிடப்பட்டுள்ள செய்தியில், பெண் வேடமிட்டு குழந்தையை கடத்த முயன்றவர் காவல்துறையிடம் ஒப்படைப்பு என்று செய்தி வெளியாகியுள்ளது.

lebanondebate. என்கிற ஊடகத்திலும் பெண் வேடமிட்டு குழந்தைய கடத்த முயன்ற நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் வெளியாகியுள்ள செய்தியில், லெபனானிலும் இந்த செய்தி கடந்த 2019ஆம் ஆண்டு பரவிய நிலையில், அதிகாரப்பூர்வ அரசாங்க சமூக வலைத்தளப்பக்கத்தில் இப்புகைப்படம் எகிப்தை சேர்ந்தது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பெங்களூருவில் கோவிலில் குண்டு வைக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ் நபர் என்று பரவும் செய்தி தவறானது என்பது உறுதியாகியது.

Also Read: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் மு.க.ஸ்டாலின் புகைப்பட பதாகையை ஏந்தியிருந்தாரா ரசிகர் ஒருவர்?

Conclusion

கோவிலில் குண்டு வைக்க முயன்ற ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி என்று பரவும் புகைப்படம் எகிப்தைச் சேர்ந்தது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from sharkiatoday, Dated August 25, 2017


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular