நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை கழிவறையில் வரைந்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நேற்று (16/12/2021) சென்னை அம்பத்தூரில் அப்துல் ரவூப் என்கிற தமிழ் தேசிய தொண்டருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் 26 ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சீமான் பேசும்போது திடீரென்று செருப்பை கழற்றி காட்டி ஆளும் திமுக அரசை விமர்சித்தார்.
இந்நிகழ்வானது சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சீமான் படத்தை கழிவறையில் வரைந்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
சீமான் அவர்களின் படத்தை கழிவறையில் வரைந்ததாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அதன் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்படத்தை ரிவர்ஸ் ச்ர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
அந்த ஆய்வில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது. Getty images எனும் புகைப்பட சேமிப்பு தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை எடிட் செய்தே மேற்கண்ட புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான புகைப்படத்தையும் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Also Read: ஹெலிகாப்டர் விபத்தில் மோடியை விசாரிக்க வேண்டும் என்றாரா சுப்ரமணியன் சுவாமி?
Conclusion
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை கழிவறையில் வரைந்ததாக கூறி வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படம் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)