நியாய விலைக் கடையில் பொருள் வாங்குவது ‘பிச்சை’ எடுப்பதற்கு சமம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“நியாய விலைக் கடையில் பொருள் வாங்குவது ‘பிச்சை’எடுப்பதற்கு சமம். ஆகையால் நாம் தமிழர் கட்சியினர் குடும்ப அட்டை வேண்டாம் என எழுதிக் கொடுக்க வேண்டும்” என்று சீமான் கூறியதாக தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.



Also Read: தமிழகத்தில் ஒமிக்ரான் காரணமாக 2 மாதங்கள் முழு ஊரடங்கா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
நியாய விலைக் கடையில் பொருள் வாங்குவது ‘பிச்சை’ எடுப்பதற்கு சமம் என்று சீமான் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராஜனைத் தொடர்புக் கொண்டு சீமான் இவ்வாறு பேசினாரா என கேட்டோம். இதற்கு அவர் “இது பொய்யான தகவல்” என்று பதிலளித்தார்.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி மேற்கண்ட தகவல் பரப்பப்படுவதால் இவ்வாறு ஒரு செய்தியை தந்தி தொலைக்காட்சி வெளியிட்டதா என அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் தந்தி தொலைக்காட்சியில் இவ்வாறு ஒரு செய்தி வந்ததற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சி டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்துக் கேட்டோம். அவர்களும் இத்தகவல் பொய்யானது என்பதை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, தந்தி தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்களிலும் சீமான் குறித்து பரவும் இந்த செய்தி பொய்யானது என்று மறுப்பு அளிக்கப்பட்டது.
Also Read: பெரியார் சிலை முன் புகைப்படம் எடுத்தாரா யோகி ஆதித்யநாத்?
Conclusion
நியாய விலைக் கடையில் பொருள் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக பரவும் தகவல் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
Packia Rajan.S, PRO, Naam Tamilar Katchi
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)