Claim: சில்க் ஸ்மிதாவுக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் – அர்ஜூன் சம்பத்
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று கதிர் நியூஸ் தெளிவுப்படுத்தியுள்ளது.
“80 காலகட்டத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய கவர்ச்சி நடிகை சில்க் அவர்களுக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும்!” என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை வைத்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்தியில் பேசிய மோடியிடம் ‘எதுக்கு புரியாம பேசற’ என்றாரா கனிமொழி?
Fact Check/Verification
சில்க் ஸ்மிதாவுக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கோரிக்கை வைத்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
வைரலாகும் நியூஸ்கார்டை காணும்போதே இது கேலியாக உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. மேலும் இந்த கார்டில் ‘சினிமா’ என்பதற்கு ‘சிமினா’ என்று எழுப்பிழையுடன் இருப்பதையும் காண முடிந்தது. இருப்பினும் பலர் இந்த நியூஸ்கார்டை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவதால் இதுக்குறித்து முழுமையாக ஆய்வு செய்து தெளிவுப்படுத்த விரும்பினோம்.
முன்னதாக அர்ஜூன் சம்பத் தரப்பிலிருந்து இவ்வாறு ஒரு கோரிக்கை வெளியிடப்பட்டுள்ளதா என அவரின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா குறித்து எந்த ஒரு தகவலும் காணப்படவில்லை.
தொடர்ந்து தேடுகையில் பொது ஊடகங்களிலும் அர்ஜூன் சம்பத் சில்க் ஸ்மிதாவுக்கு மணிமண்டம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக எந்த செய்தியும் காணப்படவில்லை.
இதையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது கதிர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.
இதனையடுத்து கதிர் நியூஸின் ஆசிரியர் பிரதீப்பை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என அவர் தெளிவு செய்தார்.
Also Read: சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக சனாதனத்தை ஒழிப்பது எப்படி என்று கேட்டாரா நடிகர் சித்தார்த்?
Conclusion
சில்க் ஸ்மிதாவுக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கோரிக்கை வைத்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டு போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Phone conversation with Pradeep, Kathir News
Self Analysis
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)