திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கின்றது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு கட்சியினரும் பலவிதமான வாக்குறுதிகளை கூறி ஓட்டு கேட்டு வருகின்றனர். திமுக தலைவரான ஸ்டாலின் அவர்கள், திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று கூறி ஒட்டு கேட்டதாகக் கூறி நியூஸ் 18 தமிழ்நாட்டின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/drRX1

Archive Link: https://archive.ph/7C6LQ

Archive Link: https://archive.ph/2Q0Am
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததிலிருந்து அதைச் சுற்றி பல பொய் செய்திகள் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்றது. முன்னதாக, திமுக முன்னாள் அமைச்சர்களான எ.வ. வேலு, க.பொன்முடி ஆகியோர் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டது.
அத்தகவலை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தீர ஆராய்ந்து, அவைகள் முற்றிலும் பொய் செய்தி என உரிய ஆதாரத்துடன் விளக்கி இருந்தோம்.
அச்செய்திகளைப் படிக்க:
- எ.வ.வேலு வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்றாரா?
- வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்றாரா பொன்முடி?
இப்போது இவர்களைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று கூறியதாக கூறி சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவலானது நியூஸ் 18 தமிழ்நாட்டின் புகைப்படச் செய்தி டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தி பரப்பப்படுவதால், இவ்வாறு ஒரு செய்தி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் வந்துள்ளதா என்பதை இந்நிறுவனத்தின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
நம் தேடலில் இவ்வாறு ஒரு செய்தி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் வந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையின் தலைவரைத் தொடர்புக் கொண்டு இதுக்குறித்துக் கேட்டோம்.
இதற்கு அவர்,
“இதுத் தவறான செய்தி. இவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை”
என்று நமக்கு விளக்கமளித்தார்.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் அவர்கள் கூறியதாக பரவும் தகவல் பொய்யான ஒன்று என்பது நமக்கு தெளிவாகின்றது.
Conclusion
திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கூறியதாகப் பரப்பப்படும் புகைப்படச் செய்தி எடிட் செய்யப்பட்டு போலியாக தயாரிக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
News 18 Tamilnadu:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)