வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkமலப்புரத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டதாக பரவும் தவறான புகைப்படம்!

மலப்புரத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டதாக பரவும் தவறான புகைப்படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மலப்புரத்தில் வந்தே பாரத் ரயிலின் கண்ணாடி உடைக்கப்பட்ட படம் 
Fact: வைரலாகும் படம் விசாகப்பட்டினத்தில் எடுக்கப்பட்டதாகும்

கேரளாவின் மலப்புரத்தில் வந்தே பாரத் ரயிலின் மீது மர்ம நபர்களால் கல்வீசப்பட்டு, ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மலப்புரத்தில் வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதாக வைரலாகும் படம்
Screenshot from Twitter@mahesh74391485
மலப்புரத்தில் வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதாக வைரலாகும் படம்
Screenshot from Facebook / மூலனூர் மண்டல் பாஜக
மலப்புரத்தில் வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதாக வைரலாகும் படம்
Screenshot from Facebook / இந்திய முப்படைச் செய்திகள்

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: புற்றுநோயால் இறந்த ஃபேஷன் டிசைனர் என்று சோனாலி பிந்த்ரேவின் படத்தை பரப்பும் இணையவாசிகள்! 

Fact Check/Verification

மலப்புரத்தில் வந்தே பாரத் ரயிலின் மீது கல்வீசப்பட்டு, ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டதாக கூறி புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் அப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டதல்ல, விசாகப்பட்டினத்தில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு தெரிய வந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் விசாகப்பட்டினத்தில் நிறுத்தப்பட்டிருந்த வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இதுக்குறித்து தி நியூஸ் மினிட் வெளியிட்ட செய்தியில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

மலப்புரத்தில் வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதாக வைரலாகும் படம்
Screengrab from The News Minute

ANI-யும் இந்நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

இதனையடுத்து கேரளாவில் மலப்புரத்தில் வந்தே பாரத் ரயிலின் கண்ணாடி உடைக்கப்பட்டதா என்பது குறித்து தேடினோம். இத்தேடலில் இத்தகவல் உண்மை என்பதை அறிய முடிந்தது.

இதுக்குறித்து ஊடகங்களில் வந்த செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் தெளிவாகுவது என்னவென்றால், கேரளாவின் மலப்புரத்தில் வந்தே பாரத் ரயிலின் மீது கல் வீசப்பட்டு, கண்ணாடி உடைக்கப்பட்ட தகவல் உண்மையே, ஆனால் வைரலாகும் படத்திற்கும் மலப்புர நிகழ்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, அப்படம் விசாகப்பட்டினத்தில் எடுக்கப்பட்டதாகும்.

Also Read: Fact Check: பாகிஸ்தானில் இறந்த மகள்கள் சமாதிக்கு பூட்டு போடும் பெற்றோர் எனப் பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

மலப்புரத்தில் வந்தே பாரத் ரயிலின் கல்வீசப்பட்டு, ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டதாக பரவும் படம் தவறானப் படமாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். 

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Tweet from ANI, dated January 11, 2023
Tweet from Times of India, dated May 02, 2023
Report from The News Minute, January 13, 2023

Report from Zee News, dated May 02, 2023
Report from Hindustan Times, dated May 02, 2023
Report from Times of India, dated May 02, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular