Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: அண்ணாமலைக்கு அறைக்குள் நடந்ததை வெளியே சொல்லக்கூட முடியாது – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது; உண்மையாக தமிழிசை செளந்தரராஜன் அப்படி கூறவில்லை.
அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்று பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”அண்ணாமலைக்கு நடந்தது தெரியுமா? என்னையாவது வெளிப்படையாக கண்டித்தார். அண்ணாமலைக்கு அறைக்குள் நடந்ததை வெளியே சொல்லக்கூட முடியாது. சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் அமித்ஷா தமிழிசை செளந்தரராஜனிடம் கண்டிப்பாக ஏதோ ஒன்று குறித்து பேசிய வீடியோ ஊடகங்களில் பரவியது. இந்நிலையில், இந்த நியூஸ்கார்ட் தற்போது வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: CISF காவலர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த கைத்தடமா இது?
அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்று பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தை ஆராய்ந்தபோது கடந்த ஏப்ரல் 13, 2024 அன்று அவர்கள் வெளியிட்டிருந்த நியூஸ்கார்டினை தற்போதைய வைரல் நியூஸ்கார்ட் ஒத்திருந்தது.
ஆனால், அதில் “ராகுகாலம் பார்க்காமல் எந்த ஒரு திமுக வேட்பாளராவது வேட்பு மனு தாக்கல் செய்தது உண்டா? இந்துக்களின் ஓட்டுகளை வாங்கிய நீங்கள் ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்?; தமிழர்களை பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு உரிமை இல்லை தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்” என்கிற செய்தியே இடம்பெற்றிருந்தது. குறிப்பிட்ட நியூஸ்கார்டினை எடிட் செய்தே தற்போதைய வைரல் நியூஸ்கார்டினை உருவாக்கியுள்ளனர் என்பது தெளிவாகியது.
மேலும், இதுகுறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ‘வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது’ என்று விளக்கமளித்தார். மேலும், குறிப்பிட்ட நியூஸ்கார்டினை போலி என்று குறியிட்டு நமக்கு அனுப்பி வைத்தார்.
தமிழிசை செளந்தரராஜன் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: நிதிஷ் குமாரைக் கண்டவுடன் மரியாதையாக எழுந்து நின்ற மோடி என்று பரவும் வீடியோவின் பின்னணி என்ன?
அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்று பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
X post from, Puthiyathalaimurai, Dated April 13, 2024
Phone Conversation with Ivani, Puthiyathalaimurai, Dated June 13, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
July 4, 2025
Vijayalakshmi Balasubramaniyan
March 27, 2025
Vijayalakshmi Balasubramaniyan
March 25, 2025