வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkதமிழ்நாட்டில் மக்களுக்கு 1000 பிரச்சினைகள் இருக்கிறது என்று கூறினாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்?

தமிழ்நாட்டில் மக்களுக்கு 1000 பிரச்சினைகள் இருக்கிறது என்று கூறினாரா தமிழக முதல்வர் ஸ்டாலின்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

தமிழ்நாட்டில் மக்களுக்கு 1000 பிரச்சினைகள் இருக்கிறது என்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜகவிடம் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில்
Source: Facebook

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் குறித்த பாஜக வானதி சீனிவாசனின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் பிரச்சினையில் பாஜக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், “மக்கள் பிரச்சினையில் பாஜக கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மக்களுக்கு 1000 பிரச்சினைகள் இருக்கிறது.” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழ்நாட்டில்
Source: Facebook

Facebook Link

தமிழ்நாட்டில்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராசு வன்னியர் என்று வழித்தடம் ஒன்றிற்கு பெயரிட்டதா கலிஃபோர்னியா அரசு?

Fact Check/Verification

தமிழ்நாட்டில் மக்களுக்கு 1000 பிரச்சினைகள் இருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட நியூஸ்கார்டு தந்தி டிவி லோகோவைக் கொண்டிருந்ததால் அவர்களது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளத்தில் ஆராய்ந்தோம். அப்போது, “மக்கள் பிரச்சினையில் பாஜக கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசிடம் பேசி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மக்களுக்கு எது சாதகம் என்பதை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். தேவையில்லாத அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால், அது நடக்கவே நடக்காது. மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் குறித்த வானதி சீனிவாசனின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்” என்கிற நியூஸ்கார்டில் முதல்வர், தமிழ்நாட்டில் மக்களுக்கு 1000 பிரச்சினைகள் இருக்கிறது என்று கூறியதாக வார்த்தைகளை எடிட் செய்துள்ளனர்.

இதனை, தந்தி டிவி தரப்பிலும் செய்தியாளர் வினோத்திடம் தொடர்பு கொண்டு உறுதி செய்துகொண்டோம்.

Source: YouTube

Conclusion

தமிழ்நாட்டில் மக்களுக்கு 1000 பிரச்சினைகள் இருக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered image

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular