திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkதமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதா?

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தம்.

Fact: முகாம்களின் மூலம் நடத்தப்பட்டு வந்த உறுப்பினர்கள் சேர்க்கையே நிறுத்தப்பட்டுள்ளது. மற்றபடி ஆன்லைன் மூலம் உறுப்பினராக சேரலாம்.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் உத்தரவுப்படி அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக கூறி நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக பரவும் தகவல்

X Link | Archive Link

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக பரவும் தகவல்

Facebook Link

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக பரவும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஒன்றிய அரசை எதிர்த்து மக்கள் போராட வேண்டும் என்றாரா இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்?

Fact Check/Verification

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து, அக்கட்சியின் செய்தி தொடர்பு ஆதரவாளர் லயோலா மணி இத்தகவல் தவறானது என்று மறுத்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

உறுப்பினர் சேர்க்கை நிறுத்தம் என்ற தகவல் பொய்யானது. வதந்தி பரப்பி வருகின்றனர். ஏற்கனவே ஆன்லைன் செயலி மூலம் கட்சியில் உறுப்பினராக சேரலாம் என்று அறிவிக்கப்பட்ட ஆன்லைன் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் விதி அமலுக்கு வந்துவிட்டது. எனவே நேரடியாக மக்களை சந்தித்து, முகாம் அமைத்து நடைபெற்று வந்த உறுப்பினர் சேர்க்கை மட்டும் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. சேர விருப்பம் உள்ளவர்கள் தாராளமாக கட்சியில் இணையலாம்.

இத்தகவல் தவறானது என்று உறுதியாகிய நிலையில் மாலை மலர் இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டதா என தேடினோம். அதில் மாலை மலர் இச்செய்தியை வெளியிட்டு, பின்பு அதை நீக்கியுள்ளதை அறிய முடிந்தது.

இதனையடுத்து மாலை மலர் டிஜிட்டல் துறையை சார்ந்த ரதீஸை தொடர்புக் கொண்டு இத்தகவல் குறித்து விசாரித்தோம். அவர், முகாம்களில் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதையே நாங்கள் செய்தியாக இணையத்தளத்தில் பிரசுரித்தோம். பின்னர் இச்செய்தியை செய்தித்தாளில் பிரசுரிக்க வேண்டாம் என்று முடிவெடுத்ததை தொடர்ந்து, இணையத்தளத்திலும் அச்செய்தியை நீக்கி விட்டோம் என்று தெரிவித்தார்.

இதனடிப்படையில் பார்க்கையில் நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட காரணத்தால் தவெக முகாம்களின் மூலம் நேரடியாக உறுப்பினர்கள் சேர்ப்பதையே தற்காலிகமாக நிறுத்தியுள்ளது எனவும், செயலி வழியாக ஆன்லைனில் உறுப்பினராவதை  நிறுத்தவில்லை எனவும் தெளிவாகின்றது.

 Also Read: அதிமுகவினர் அனைவரும் பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வலுவோடு உள்ளோம் என்றாரா செல்லூர் ராஜூ?

Conclusion

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Tweet from Loyola Mani,TVK, Dated March 17, 2024
Phone Conversation with Ratheesh, Digital head, Maalaimalar


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular