Fact Check
தமிழக அரசின் கோபுர சின்னம் மாற்றப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?
தமிழக அரசின் கோபுர சின்னம் மாற்றி அமைக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக தகவல் ஒன்றும், குறிப்பிட்ட தகவலைத் தாங்கி சன் நியூஸ் நிறுவனத்தின் நியூஸ் கார்டு ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழக அரசின் சின்னமாக இடம்பெற்றிருக்கும் கோபுரம், புகழ்பெற்ற தமிழக கோயிலான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரமாகும்.
1949 ஆம் ஆண்டு, சென்னை மாகாண முதல்வராக இருந்த ஓமந்தூரார் ராமசாமி, இந்த சின்னத்தை தமிழ அரசின் சின்னமாக அறிவித்தார்.
தமிழகத்தில் தமிழ்நாடு அரசு சார்ந்த அலுவல்முறை செயல்பாடுகள், அதிகாரிகள் என்று அனைத்திலும் இந்த லச்சினையே இடம் பெற்றிருக்கும். குறிப்பிட்ட அந்த லச்சினையில் அமைந்திருக்கும் ஓவிய வடிய ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், ஆர்.கிருஷ்ணாராவ் என்கிற ஓவியரால் வரையப்பட்டது.
இந்நிலையில், “தமிழக அரசின் கோபுர சின்னம் மாற்றம்? தமிழக அரசின் கோபுர சின்னம் குறிப்பிட்ட மதத்தை குறிப்பதால் சின்னத்தை மாற்ற குழு அமைக்கப்படும். குழு அமைத்து அறிக்கை தர உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தகவல்” என்கிற வாசகங்கள் அடங்கிய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
தமிழக அரசின் கோபுர சின்னம் மாற்றப்பட குழு அமைக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாகப் பரவும் செய்தி மற்றும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் இறங்கினோம்.
குறிப்பிட்ட நியூஸ் கார்டினை சன் நியூஸ் வெளியிட்டதா என்று முதலில் தெரிந்துகொள்ள அதுகுறித்து சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு மனோஜிடம் கேட்டோம். அவர் குறிப்பிட்ட நியூஸ் கார்டு மற்றும் அதிலிருக்கும் செய்தி இரண்டுமே போலியானது; சித்தரிக்கப்பட்டது என்பதை நமக்கு உறுதி செய்தார்.
தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தரப்பினை தொடர்பு கொண்டு பேசியபோது, “அவர் இதுபோன்று எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை; பரவும் செய்தி போலியானது” என்பது நமக்குத் தெரிய வந்தது.
மேலும், கடந்த 2013 ஆம் வருடம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்.கண்ணன் என்கிற ஓய்வு பெற்ற ராணுவ வீரர், இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு சின்னம் அமைந்துள்ளது என்பதாக தொடர்ந்த பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
தமிழக அரசின் கோபுர சின்னம் மாற்றப்பட குழு அமைக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
Sun News Digital Lead Manoj
One India Tamil: https://tamil.oneindia.com/news/tamilnadu/hc-quashes-case-against-tn-govt-emblem-183783.html?story=2
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)