Sunday, December 21, 2025

Fact Check

உத்திர பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்ட வைசாலி யாதவ் என்று பரவும் தவறான புகைப்படம்!

banner_image

உத்திர பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள வைசாலி யாதவ் என்பதாக புகைப்படத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

உத்திர பிரதேச
Source: Facebook

உக்ரைனில் மருத்துவம் படிக்க வந்து போரில் சிக்கியுள்ளதாக வீட்டிலிருந்தே வீடியோ வெளியிட்ட உத்திர பிரதேச மாணவி வைசாலி யாதவ் என்கிற செய்தி சமீபத்தில் வீடியோ ஒன்றுடன் வைரலாகியது.

இந்நிலையில், “பெயர் வைசாலி யாதவ். உத்திரபிரதேசத்தில் இருக்கும் இவர் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர். இவர் தந்தை அக்கட்சியில் தலைவர். தான் ஒரு மருத்துவர் என்றும் உக்ரைனில் இருந்து தவித்த தன்னை இந்திய அரசு மீட்க உதவவில்லை என்று தன் வீட்டில் இருந்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் இது பரவ தொடங்கியது. ஆனால் அங்கு ஆட்சி செய்வது யோகி ஜி. அவர் விடுவாரா? விசாரணை மேற்கொள்ள சிறைவாசம் செல்ல இருக்கிறார். இந்திய அரசை தவறாக விமர்சனம் செய்த காரணத்தினால்” என்பதாக இளம்பெண் ஒருவர் காவல்துறையினர் புடைசூழ அமர்ந்திருக்கும் புகைப்படத் தகவல் பரவி வருகிறது.

உத்திர பிரதேச
Source: Facebook

Facebook Link

உத்திர பிரதேச
Source: Facebook

Facebook Link

உத்திர பிரதேச
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: எடப்பாடி பழனிச்சாமி மீது சசிகலா நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பரவுகின்ற போலி நியூஸ் கார்டு!

Fact Check/Verification

உத்திர பிரதேச காவல்துறையால் உக்ரைனில் தவிப்பதாக வீட்டில் இருந்தே வீடியோ வெளியிட்டு கைது செய்யப்பட்டுள்ள வைசாலி யாதவ் என்று பரவும் புகைப்படத் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

ஏற்கனவே வைசாலி யாதவ் கைது என்கிற செய்தியே போலியானது என்று உத்திர பிரதேச பத்திரிக்கையாளர் ராஜா பால், எஸ்.பி ராஜேஷ் திவேதி பேசும் வீடியோ ஒன்றினை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Source: Twitter

இந்நிலையில், குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தில் இருக்கும் இளம்பெண் யார் என்று தேடினோம். அத்தேடலில், வைரல் புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் இளம்பெண் பெயர் கமலா செளத்ரி என்பது நமக்குத் தெரிய வந்தது. மேலும், அவர் ராஜஸ்தான் காவல்துறையினரால் ஆயுதங்களுடன் காவல்துறையினரை சேலன்ஞ் செய்து கைது செய்யப்பட்டவர் என்பது நமக்குத் தெரிய வந்தது.

Source: Twitter

நாகெளர் காவல்துறையினர் இந்த கைது குறித்த பதிவினை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். எனவே, குறிப்பிட்ட புகைப்படம் வைசாலி யாதவ் என்பதாக தவறாகப் பரவுகிறது என்பது நமக்கு உறுதியானது.

Conclusion

உத்திர பிரதேச காவல்துறையால் உக்ரைனில் தவிப்பதாக வீட்டில் இருந்தே வீடியோ வெளியிட்டு கைது செய்யப்பட்டுள்ள வைசாலி யாதவ் என்று பரவும் புகைப்படத் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,641

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage