ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkபின்தங்கிய மாநிலங்களுக்காகவும்,தேச நலனுக்காகவும் தமிழகம் ஜிஎஸ்டி பங்கை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றாரா பிரதமர்?

பின்தங்கிய மாநிலங்களுக்காகவும்,தேச நலனுக்காகவும் தமிழகம் ஜிஎஸ்டி பங்கை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றாரா பிரதமர்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பின்தங்கிய மாநிலங்களுக்காகவும், தேச நலனுக்காகவும் தமிழகம் தனது ஜிஎஸ்டி பங்கை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.  

பின்தங்கிய மாநிலங்களுக்காகவும் தேச நலனுக்காகவும் தமிழகம் தனது ஜிஎஸ்டி பங்கை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

பிரதமர் மோடி மான் கி பாத் (மனதின் குரல்) எனும் நிகழ்ச்சியின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் வானொலியின் மூலம் நாட்டு மக்களிடயே பேசி வருகின்றார்.

Also Read: உலகத்தின் வலிமையான தலைவர் மோடி என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதா?

அந்த வகையில் கடந்த ஞாயிறன்று (26/09/2021) பிரதமர் 81 ஆவது மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். இதில், “தமிழகம் போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலங்களின் நலனுக்காகவும் தேச நலனுக்காகவும் ஜிஎஸ்டியில் தங்களது பங்கை விட்டுக் கொடுக்கவேண்டும்.”   என்று பேசியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பின்தங்கிய மாநிலங்களுக்காகவும் தேச நலனுக்காகவும் தமிழகம் தனது ஜிஎஸ்டி பங்கை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 1

Facebook Link

பின்தங்கிய மாநிலங்களுக்காகவும் தேச நலனுக்காகவும் தமிழகம் தனது ஜிஎஸ்டி பங்கை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

பின்தங்கிய மாநிலங்களுக்காகவும் தேச நலனுக்காகவும் தமிழகம் தனது ஜிஎஸ்டி பங்கை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

பின்தங்கிய மாநிலங்களுக்காகவும் தேச நலனுக்காகவும் தமிழகம் தனது ஜிஎஸ்டி பங்கை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாக தகவல் ஒன்று  வைரலானதை தொடர்ந்து உண்மையிலேயே பிரதமர் இவ்வாறு பேசினாரா என்பதை ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் பிரதமர் குறித்து பரவும் மேற்கண்ட தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு தெரிய வந்தது. பிரதமர் மான் கி பாத்தில் ஏறக்குறை 33 நிமிடங்கள் பேசியுள்ளார். அதில் ஒரு இடத்தில் கூட தமிழகம் ஜிஎஸ்டியை விட்டு கொடுக்க வேண்டும் என்று ஒரு இடத்தில் கூட பேசவில்லை.

Archive Link

Also Read: கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றாரா பிரதமர் மோடி?

தமிழகம் ஜிஎஸ்டியை விட்டு கொடுக்க வேண்டும் என்று பிரதமர் பேசியதாக பரவும் தகவல் பொய்யானது என்பது உறுதியானபின், வைரலாகும் தகவல் தமிழக பாஜகவின் நியூஸ்கார்ட் டெம்பிளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால் வைரலாகும் நியூஸ்கார்டை உண்மையாகவே தமிழக பாஜகதான் வெளியிட்டதா என்பது குறித்து தேடினோம்.

இந்த தேடலில் தமிழக பாஜக இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிடவில்லை, அந்த நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது.

மான் கி பாத்தில் பிரதமர், “மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாள் மற்றும் பண்டிகை காலத்தின் போது, காதி மற்றும் கைத்தறி தொடர்பான பொருட்களை மக்கள் அதிக அளவில் வாங்க வேண்டும்” என்ற கருத்தினை தெரிவித்திருந்தார். இத்தகவலை தமிழக பாஜக நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்தது.

Archive Link

அந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட பொய் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion

பின்தங்கிய மாநிலங்களுக்காகவும் தேச நலனுக்காகவும் தமிழகம் தனது ஜிஎஸ்டி பங்கை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

BJP Tamilnadu

Mann ki baat


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular