வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkசீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது; வைரலாகும் புகைப்படம் உண்மையானதா?

சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது; வைரலாகும் புகைப்படம் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

பொதுவாகவே வணிகம் செய்யும் இடங்களில் “கடன் கிடையாது” என்று வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை வைப்பது வழக்கமேயாகும். ஆனால் சில சமயங்களில் சில கடைகளில் வைக்கும் அறிவிப்பு பலகை எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்து மிகப்பெரும் செய்திப் பொருளாக மாறிவிடுகின்றது.

உதாரணத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பெட்டிக்கடை ஒன்றில் “ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது” என்று வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை ஊடகங்களில் மிகப்பெரிய செய்திப் பொருளானதை கூறலாம்.

இந்த வரிசையில் தற்போது சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.

சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம் - 1

Facebook Link

சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம் - 2

Facebook Link

சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம் - 3

Facebook Link

Also Read: தகுதியற்ற தலைமை காரணமாகவே அதிமுக தோல்வியடைந்தது என்று சி.வி.சண்முகம் கூறினாரா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அதன் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். இதில் அப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.

உண்மையில்  வைரலாகும் படத்தில் இருக்கும் அறிவிப்பு பலகையில், “கன்னித்தீவு கதை முடியும் வரை கடன் கிடையாது” என்றே எழுதப்பட்டிருந்தது. கன்னித்தீவு என்பது தினத்தந்தி நாளிதழில் வெளிவரும் தொடர் படக்கதையாகும். இந்த கதையானது 1960-லிருந்து இன்று வரை தொடர்ந்து தினத்தந்தியில் தினமும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றது.

சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டதாக வைரலாகும்  படத்தின் உண்மைத்தன்மை

இந்த படம் உண்மையில் எங்கே, எப்பொழுது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் இப்படம் இரண்டு வருடங்களுக்கு முன்பிலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை உணவகம் ஒன்றில் வைக்கப்பட்டதாக வைரலாகும்  படத்தின் உண்மைத்தன்மை - 2

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வந்த இந்து மாணவனை அடித்த கிறிஸ்துவ ஆசிரியர் என்று பரவும் வீடியோ செய்தி உண்மையா?

Conclusion

உணவகம் ஒன்றில் சீமான் உண்மை சொல்லும் வரை கடன் கிடையாது என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Our Sources

Sharechat post


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular