ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact CheckViralஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமரின் வேலை இல்லை என்றாரா ஈபிஎஸ்?

ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமரின் வேலை இல்லை என்றாரா ஈபிஎஸ்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமரின் வேலை இல்லை – ஈபிஎஸ்

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமரின் வேலை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகிறது.

“ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமருடைய வேலை இல்லை. அவர் ராஜினாமா செய்யத் தேவையில்லை.” என்று அந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.

ஒவ்வொரு தண்டவாளமாக
Screenshot from Facebook/praba.apt

Archived Link

Screenshot from Facebook/ponnarasan.ponnarasan.3511

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பிரதமர் மோடி வருகைக்காக மாற்றியமைக்கப்படும் ஒடிசாவின் கட்டாக் மருத்துவமனை என்று பரவும் பழைய புகைப்படம்!

Fact Check/Verification

ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமரின் வேலை இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

 முன்னதாக, எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தபோது ஒடிசா ரயில் விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர் வேறெதுவும் பதிவிட்டிருக்கவில்லை.

தொடர்ந்து, வைரலாகும் நியூஸ்கார்ட் மாலைமலர் பெயரில் பரவும் நிலையில் அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். நம் தேடலின் முடிவில், கடந்த ஜூன் 1ஆம் தேதியன்று ” மேகதாது அணை விவகாரம்- கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை.” என்று நியூஸ்கார்ட் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட அந்த நியூஸ்கார்டினை எடிட் செய்தே தற்போதைய நியூஸ்கார்டை பரப்பி வருகின்றனர் என்று அறிய முடிந்தது.

Original News Card
Altered News Card

மேலும், இதுகுறித்து மாலைமலரின் ஆசிரியர் ரதேஷை தொடர்பு கொண்டு பேசினோம். அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது” என்று விளக்கமளித்தார்.

Also Read: தவறானவர்களின் கையில் செங்கோல் கொடுக்கப்பட்டதன் நிமித்த செய்தியே ஒடிசா ரயில் விபத்து என்று திருவாவடுதுறை ஆதினம் கூறினாரா?

Conclusion

ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமரின் வேலை இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது   நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Tweet from, Edappadi Palaniswami, Dated June 03, 2023
Facebook Post From, Malaimalar, Dated June 01, 2023

Phone Conversation With Rathesh, Malaimalar, Dated June 05, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular