இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

விஜய் மல்லையா பாஜகவுக்கு 35 கோடி அளித்தாரா?
விஜய் மல்லையா பாஜகவுக்கு 2016 ஆம் ஆண்டு 35 கோடி நிதியாக கொடுத்ததாகக் கூறி காசோலை ஒன்றின் படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்றாரா பொன்முடி?
க.பொன்முடி அவர்கள் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று கூறியதாகக் கூறி புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

திமுகவின் தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது என்றாரா சீமான்?
திமுகவின் தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளதென்றும், அவற்றை செயல்படுத்தினால் தங்கள் கட்சியே தமிழகத்திற்கு தேவையில்லை என்றும் சீமான் அவர்கள் கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டுவண்டியில் செல்லுங்கள் என்றாரா ஹெச்.ராஜா?
பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள் என்று பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா கூறியதாகப் பரவும் செய்தி சித்தரிக்கப்பட்டதாகும்.

சிவன் கோவில்களை அழித்து புத்த விஹாரங்களை கட்ட விசிக உதவும் என்று ட்விட் பதிவிட்டாரா திருமாவளவன்?
சிவன் கோவில்களை இடித்து, புத்த விஹாரங்களை அமைக்க விசிக குரல் கொடுக்கும் என்று திருமாவளவன் ட்விட் போட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)