Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:
கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் நோயாளிகள் இட வசதியின்றி கீழே எல்லாம் படுக்க வைக்கப்பட்டுள்ளது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
நாராயணன் திருப்பதி அவர்கள் காயத்ரி ரகுராம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.
நாங்கள் தாயில்லாத பிள்ளைகள்; எங்கள் மீது ஊழல் வழக்குகளை போடுவதை முதல்வர் தவிர்க்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்ததாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.
தைரியம் இருந்தால் ஈஷா யோகா மைய நிறுவனரான சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் மீது கைவைத்தோ கைது செய்தோ பாருங்கள் என்று பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா அவர்கள் பதிவிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனது இந்தியக் குடியுரிமையை கைவிட்டு விட்டு, வெளிநாட்டு இந்தியக் குடியுரிமையைப் பெற்று விட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)