இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

கோகுல்ராஜ் வழக்கில் தண்டனை பெற்ற யுவராஜை குற்றமற்றவர் என்றாரா அண்ணாமலை?
கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் தண்டனை பெற்ற யுவராஜை குற்றமற்றவர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றாரா செந்தில் பாலாஜி?
மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
வரதட்சணை கேட்டு மாப்பிள்ளை ஒருவர் திருமணத்தை நிறுத்தியதாக ஊடகங்களில் வந்த வீடியோ சித்தரிக்கப்பட்டதாகும்.

உத்திர பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்ட வைசாலி யாதவ் என்று பரவும் தவறான புகைப்படம்!
உத்திர பிரதேச காவல்துறையால் உக்ரைனில் தவிப்பதாக வீட்டில் இருந்தே வீடியோ வெளியிட்டு கைது செய்யப்பட்டுள்ள வைசாலி யாதவ் என்று பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும்.

இந்திய மாணவர்களை நேரில் வந்து சந்தித்தாரா ரஷ்ய அதிபர் புதின்?
இந்திய மாணவர்களை நேரில் வந்து சந்தித்து வழியனுப்பி வைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)