இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

மாணவர் தனுஷின் உறவினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டதாக வதந்தி!
மாணவர் தனுஷின் உறவினர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்

மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் போன்ற மதவெறியர்களால் நாசமாய் போனேன் என்றாரா ஹெச்.ராஜா?
மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் போன்ற மதவெறியர்களால் நாசமாய் போனேன் என்று ஹெச். ராஜா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்க வேண்டும் என்ற முடிவை ஏற்க முடியாது என்றாரா நட்டா?
இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற முடிவை ஏற்க முடியாது என்று நட்டா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகின்றது. ஆனால் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தற்போது கூறினாரா நளினி சிதம்பரம்?
நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று நளினி சிதம்பரம் கூறியதாகப் பரவும் செய்தி பழையதாகும்.

வானதி சீனிவாசன் அலுவலகத்தில் நோட்டு எண்ணும் மெஷின் இருக்கிறதா?
வானதி சீனிவாசன் அலுவலகத்தில் நோட்டு எண்ணும் மெஷின் இருப்பதாகப் புகைப்படம் ஒன்று குறித்து பரவும் தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)