இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

கொடநாடு வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் ஈபிஎஸ் நடிக்கின்றார் என்றாரா மயில்சாமி?
கொடநாடு வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் எடப்பாடி பழனிசாமி நடிக்கின்றார் என்று நடிகர் மயில்சாமி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது. ஆனால் உண்மையில் அந்த நியூஸ்கார்ட் போலியானதாகும்.

30 நாட்களில் நாட்டை விற்பது எப்படி என்கிற மோடி படத்துடன் கூடிய புத்தகத்தை வெளியிட்டாரா அண்ணாமலை?
30 நாட்களில் நாட்டை விற்பது எப்படி என்கிற தலைப்பிலான புத்தகத்தை பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.

பூப்புனித நீராட்டு விழா காரணமாக ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்றாரா நிதியமைச்சர்?
பூப்புனித நீராட்டு விழா காரணமாக ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகின்றது. ஆனால் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

திமுக தலித் அணி தலைவராக வன்னியரசு நியமிக்கப்பட்டுள்ளதாக வதந்தி!
திமுக தலித் அணி தலைவராக வன்னியரசு நியமிக்கப்பட்டுள்ளார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.

கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றாரா பிரதமர் மோடி?
பிரதமர் மோடி கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் உண்மையில் அந்த நியூஸ்கார்ட் போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)