சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வண்டி ஓட்டிய ஓட்டுநரும் கைது செய்யப்படுவார் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாக சன் நியூஸ் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு அவர்கள் கடந்த ஜூன் 30 அன்று பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் காவலர்கள் அனைவருக்கும் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் எனும் புதிய உத்தரவை கடந்த வெள்ளியன்று (30/07/2021) சைலேந்திர பாபு அறிவித்தார்.
இந்த உத்தரவானது காவல்துறையினரிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் கைது செய்யப்படுவார் என்று சைலேந்திர பாபு உத்தரவிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த நியூஸ்கார்டின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுகுறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநரும் கைது செய்யப்படுவார் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டதாக சன் நியூஸ் நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை சன் நியூஸ் வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்தத் தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது. காவலர்களுக்கு விடுமுறை கொடுக்கப்படும் என்று சைலேந்திர பாபு விடுத்த உத்தரவு குறித்து சன் நியூஸில் நியூஸ்கார்ட் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் பரப்பப்படுகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனைத் தொடர்ந்து, சன் நியூஸின் டிஜிட்டல் தலைவரைத் தொடர்புக் கொண்டு இதுக்குறித்துக் கேட்டோம். அவரும்,
“இது போலியான நியூஸ்கார்ட், இதை நாங்கள் வெளியிடவில்லை.”
என்று உறுதிப்படுத்தினார்.
Also Read: அமைச்சர் ராஜகண்ணப்பன் விசிக தலைவர் திருமாவளவனை பழைய சேர் ஒன்றில் அமரச்செய்தாரா? உண்மை என்ன?
Conclusion
சொந்த பயன்பாட்டு வாகனத்தை வாடகைக்கு விட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் கைது செய்யப்படுவார் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Sun News: https://www.facebook.com/SunNewsTamil/posts/4480577448665603
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)