ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“குறிப்பிட்ட ஒரு மாநில மக்களின் பொழுதுபோக்கை விட இந்து மதத்தினர் தெய்வமாக வணங்கும் பசு மற்றும் காளை மாடுகளின் நலன்தான் முக்கியம்” என்று ஜல்லிக்கட்டிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசு பதிலளித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளர் இசை, ‘தமிழர்கள் இந்துக்கள் அல்ல! ஆரிய சனாதன திணிப்பான இந்துத்வா கும்பல் உச்சநீதி மன்றத்தில் வாதம்!’ என்று தலைப்பிட்டு அவரது டிவிட்டர் பக்கத்தில் இந்த நியூஸ்கார்டை பதிவிட்டுள்ளார்.

இதேபோல் பலரும் இந்த நியூஸ்கார்டை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராமநாதபுரத்தில் சித்தர் பறந்ததாக பரவும் வீடியோவின் உண்மை என்ன?
Fact Check/Verification
ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் வைரலாகும் இத்தகவல் முற்றிலும் தவறானது என்பதை அறிய முடிந்தது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இந்த வழக்கில் மத்திய அரசு உண்மையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதராகவே வாதிட்டுள்ளது.
இவ்வழக்கு குறித்து இந்து தமிழ் வெளியிட்ட செய்தியில்,
மத்திய அரசு தரப்பில் சோலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “ஜல்லிகட்டுக்கு குடியரசு தலைவர் அனுமதி வழங்கியது சட்டபூர்வமானது. நாங்கள் மாநில அரசுகளின் முடிவுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஏனெனில் இந்தப் போட்டிக்கு மாவட்ட ஆட்சியர் முழு ஆய்வுக்கு பிறகு தான் அனுமதி வழங்கப்படுகிறது. இதில் சட்ட விதிகள் மீறப்பட்டால் மூன்று ஆண்டு சிறை, 5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு தொடர்பான விவகாரத்தில் எப்படி தலையிட முடியும்?
ஜல்லிக்கட்டு என்பது ரேக்ளா உள்ளிட்ட பந்தயம் போல் அல்ல. ரேக்ளா போன்ற பந்தயங்களை மாநில அரசுகள் பல முறை தடை செய்துள்ளன. ஆனால், ஜல்லிக்கட்டு தமிழரின் கலாச்சாரத்தோடு கலந்த விளையாட்டு என்பதால் அதனை தமிழகம் இதுவரை தடை செய்ததே இல்லை. அதே வேளையில் ஜல்லிக்கட்டு சட்டத்தில் பல்வேறு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளனர். எனவே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு தனது முழு ஆதரவையும் வழங்கியுள்ளது” என்று வாதிட்டுள்ளார்
என்று குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் வேறு சில ஊடகங்களும் மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதிட்டது என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனையடுத்து வைரலாகும் தகவல் தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை அறிய முடிந்தது.
தந்தி தொலைக்காட்சி, “விலங்குவதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு சட்டப்பேரவைக்கு அதிகாரமுண்டு. உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு வாதம்” என்று தலைப்பிட்டு டிசம்பர் 6, 2022 அன்று நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்த நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அவரும் அந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.
Also Read: மோர்பி பாலத்தை பிரதமர் பார்வையிட ₹30 கோடி செலவானது என்று ஆர்டிஐ தகவல் வெளியிட்டதா?
Conclusion
ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
YouTube Video, from News 18 Tamilnadu, on December 06, 2022
News Report, from The hindu Tamil, on December 06, 2022
Facebook post, from Thanthi Tv, on December 06, 2022
Phone Coversation with Vinoth, Thanthi Tv on December 08, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)