வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact CheckViralமோர்பி பாலத்தை பிரதமர் பார்வையிட ₹30 கோடி செலவானது என்று ஆர்டிஐ தகவல் வெளியிட்டதா?

மோர்பி பாலத்தை பிரதமர் பார்வையிட ₹30 கோடி செலவானது என்று ஆர்டிஐ தகவல் வெளியிட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

விபத்து நடந்த மோர்பி பாலத்தை பிரதமர் மோடி பார்வையிட ₹30 கோடி செலவானது என்று ஆர்டிஐ தகவல் வெளியிட்டதாக தகவல் ஒன்று ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

விபத்து நடந்த மோர்பி பாலத்தை பிரதமர் மோடி பார்வையிட ₹30 கோடி செலவானது என்று ஆர்டிஐ தகவல் வெளியிட்டதாக பரவும் தகவல்

குஜராத் மாநிலம் மோர்பியில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி ஆற்றின் நடுவே கட்டப்பட்டிருந்த தொங்குபாலம் ஒன்று அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 55 குழந்தைகள் உட்பட மொத்தம் 135 பேர் உயிரிழந்தனர்.  இந்த விபத்து நடந்த பகுதியை பிரதமர் மோடி நவம்பர் 1 ஆம் தேதி பார்வையிட்டார்.

இந்நிலையில் பிரதமர் விபத்து நடந்த பாலத்தை பார்வையிட சென்றதற்கு ₹30 கோடி செலவு செய்யப்பட்டது என்று  தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளதாக  தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.

தினகரன், சத்யம் நியூஸ் போன்ற ஊடகங்கள் இத்தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளன.

திமுக ஐடி விங்கும் அதன் சமூக ஊடக பக்கத்தில் இத்தகவலை பகிர்ந்துள்ளது.  

விபத்து நடந்த மோர்பி பாலத்தை பிரதமர் மோடி பார்வையிட ₹30 கோடி செலவானது என்று ஆர்டிஐ தகவல் வெளியிட்டதாக பரவும் தகவல் - 01
Screenshot of tweet by @DMKITwing

இதனையடுத்து சமூக ஊடகங்களில் பலரும் இத்தகவலை பகிர்ந்து வருவதை காண முடிகின்றது.

விபத்து நடந்த மோர்பி பாலத்தை பிரதமர் மோடி பார்வையிட ₹30 கோடி செலவானது என்று ஆர்டிஐ தகவல் வெளியிட்டதாக பரவும் தகவல் - 02
Screenshot of Facebook post by sangu.udayakumar
விபத்து நடந்த மோர்பி பாலத்தை பிரதமர் மோடி பார்வையிட ₹30 கோடி செலவானது என்று ஆர்டிஐ தகவல் வெளியிட்டதாக பரவும் தகவல் - 01
Screenshot of Facebook post by விபூதி

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சூதாட்டம் இந்து மதத்தின் அங்கம்; ஆன்லைன் சூதாட்டங்களை முழுவதுமாக அழிக்க கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?

Fact Check/Verification

விபத்து நடந்த மோர்பி பாலத்தை பிரதமர் மோடி பார்வையிட ₹30 கோடி செலவானது என்று ஆர்டிஐ தகவல் வெளியிட்டதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் திரிணாமுல் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் சாகித் கோகலேவின் டிவீட்டே வைரலாகும் இச்செய்திக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.

சாகித் கோகலே daxpatel எனும் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்த குஜராத்தி ஈ – பேப்பர் ஒன்றின் செய்தியை அடிப்படையாக வைத்தே இத்தகவலை பதிவிட்டிருந்தார். அந்த ஈ- பேப்பர் எந்த நிறுவனத்தின் ஈ-பேப்பர் என்பது குறித்து தேடுகையில் அது குஜராத் சமச்சார் எனும் நிறுவனத்தின் ஈ-பேப்பர் என்று daxpatel குறிப்பிட்டிருந்ததை காண முடிந்தது.     

விபத்து நடந்த மோர்பி பாலத்தை பிரதமர் மோடி பார்வையிட ₹30 கோடி செலவானது என்று ஆர்டிஐ தகவல் வெளியிட்டதாக பரவும் தகவல் - 04

இதனைடுத்து குஜராத் சமாச்சார் ஈ-பேப்பர் இணையத்தளத்தில் ஆர்டிஐ குறித்து ஏதேனும் செய்தி வந்துள்ளதா என்று தேடினோம். இதில் இவ்வாறு ஒரு செய்தி வந்ததற்கான தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து குஜராத் சமாச்சாரின் ஆசிரியரை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு வைரலாகும் செய்தி குறித்து விசாரிக்கையில், இவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து தேடுகையில் PIB Factcheck  வைரலாகும் இத்தகவல் தவறானது, RTI இவ்வாறு ஒரு தகவலை வழங்கவில்லை என்று குறிப்பிட்டு டிவீட் ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

Also Read: விஜயா மருத்துவமனையில் இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றதா?

Conclusion

விபத்து நடந்த மோர்பி பாலத்தை பிரதமர் மோடி பார்வையிட ரூ.30 கோடி செலவானதாக ஊடகங்களில் பரவிய தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Tweet, from PIB Chennai on 02, December 2022
Phone Conversation with Gujarat Samachar Head


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular