Fact Check
சென்னை மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக பரவும் பழைய படம்!
Claim: சென்னை மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக பரவும் படம்!
Fact: இப்படம் எட்டு ஆண்டுகளுக்கு முந்தைய, 2015 ஆம் ஆண்டின் பழைய படமாகும்.
‘ஒரு மாநிலத்தின் தலைநகரம் எல்லா பகுதிகளிலிருந்தும் துண்டிக்கப்பட்டு நிலைகுலைந்து நிற்பது சோகம்’ என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக பரவும் மும்பை படம்!
Fact Check/Verification
சென்னை மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் ”2 நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழப்பட்ட வீடுகளுக்கு ரூ.5000… தமிழக அரசு புதிய அறிவிப்பு” என்று தலைப்பிட்டு டிசம்பர் 11, 2015 அன்று ஒன் இந்தியா தமிழ் வெளியிட்டிருந்த செய்தியில் இதே படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

தொடர்ந்து தேடியதில் 2015 ஆம் ஆண்டில் சென்னை வெள்ளம் குறித்து ஒன் இந்தியா வெளியிட்டிருந்த வேறு சில செய்திகளிலும் இதே படத்தை பயன்படுத்தியிருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: சென்னை மழையில் வலம் வரும் முதலை என்று பரவும் தவறான பழைய புகைப்படம்!
Conclusion
சென்னை மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறி சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படமானது 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த பழைய படமாகும்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Report from One India Tamil, Dated December 11, 2015
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)