செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024

HomeFact Checkஇந்தியாவில் ஆசிர்வாத் மாவு ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகின்றதா?

இந்தியாவில் ஆசிர்வாத் மாவு ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகின்றதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இந்தியாவில் ஆசிர்வாத் மாவு ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகின்றது.

Fact: வைரலாகும் படத்திலிருப்பது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மாவாகும். இந்த பாக்கெட்டுகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதில்லை.

“ஆசிர்வாத் ஆட்டா ஹலால் முத்திரை போட்டு இருக்கு… இன்று முதல் எச்சில் துப்பிய இந்த மைதா மாவை வாங்குவதை நிறுத்திவிடுகிறேன்… ஆசிர்வாத் ஆட்டாவை ஹிந்துக்கள் புறக்கணிப்போம்என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தியாவில் ஆசிர்வாத் மாவு ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுவதாக பரவும் தகவல்

Twitter Link | Archived Link

இந்தியாவில் ஆசிர்வாத் மாவு ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுவதாக பரவும் தகவல்

Archived Link

இந்தியாவில் ஆசிர்வாத் மாவு ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுவதாக பரவும் தகவல்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அசோக வனத்தில் சீதை அமர்ந்திருந்த கல் அயோத்திக்கு கொண்டு வரப்பட்டதாக பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

இந்தியாவில் ஆசிர்வாத் மாவு ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுவதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

இதில் வைரலாகும் படத்திலிருக்கும் ஆசிர்வாத் மாவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாவு எனவும், அந்த மாவு இந்தியாவிற்குள் விற்பனை செய்யப்படுவதல்ல எனவும் அறிய முடிந்தது. இத்தகவலை ஆசீர்வாத் பெயரில் பொருட்களை விற்பனை செய்யும் ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளதை காண முடிந்தது.

இத்தகவலை எக்ஸ் தளப் பக்கத்தில் வைரலாகும் படத்தை பதிவு செய்திருந்த ஒருவருக்கு பதிலாக தெரிவித்திருந்தது ஐடிசி.

இதேபோல் அப்படத்தை பகிர்ந்த பலருக்கும் இந்த பதிலை ஐடிசி பதிவிட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் கடந்த சில வருடங்களாகவே ஆசீர்வாத் பொருட்களில் ஹலால் முத்திரை பயன்படுத்துவதாக சர்ச்சைகள் பரவி வருவதையும், அதற்கு ஐடிசி தரப்பில் மறுப்பு தெரிவித்து விளக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதையும் காண முடிந்தது. அதன்படி மே 08, 2020 அன்று ஐடிசி தந்த விளக்கத்தில் ஹலால் முத்திரை கண்டிப்பாக கேட்கப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆசீர்வாத் பொருட்களில் ஹலால் முத்திரை பதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது.

Also Read: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்ட காட்சி என்று பரவும் பழைய வீடியோ!

Conclusion

இந்தியாவில் ஆசிர்வாத் மாவு ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்யப்படுவதாக பரவும் தகவல் தவறானதாகும். ஹலால் முத்திரை கண்டிப்பாக கேட்கப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களிலேயே இந்த முத்திரையையை ஐடிசி பதித்துள்ளது. இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Reply from ITC Cares, Dated December 01, 2023
Reply from ITC Cares, Dated May 08, 2021
ITC Cares Reply section


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular