33 லட்சம் திருடியதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்புண்டு என்று யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கோயில் புனரமைப்பு என்ற பெயரில் நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக யூடியூபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. இதற்கு பாஜக தலைவர்களான சுப்ரமணியன் சுவாமி, அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், “மிஷினரிகள் கோயில் சிலைகளை உடைத்ததாக பொய்களை பரப்பி 33 லட்சம் ரூபாய் பணத்தை வசூல் செய்து திருடிய பாஜகவை சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது. அண்ணாமலைக்கும் இதில் தொடர்பு உள்ளதாகவும், பாதி பணத்தை மத்திய மந்திரிகளை திருப்திப்படுத்த செலவு செய்ததாகவும் கார்த்திக் கோபிநாத் போதையில் உளரல்” என்று நியூஸ்கார்ட் ஒன்றுசமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



Also Read: ‘360 டிகிரி கூமுட்டை’… வைரலாகும் படத்தின் பின்னணி என்ன?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
33 லட்சம் திருடியதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்புண்டு என்று யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கூறியதாக நியூஸ்கார்ட் வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
வைரலாகும் நியூஸ்கார்டில் 15/05/2022 என்று தேதி இடப்பட்டு கடந்த 15 நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை காண முடிகின்றது. வைரலாகும் நியூஸ்கார்டானது ஜூனியர் விகடன் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், இந்நிறுவனம் இந்த வெளியிட்டதா என உறுதி செய்ய ஜூனியர் விகடனில் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் ஜூனியர் விகடன் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து விகடனின் ஆசிரியர் குழுவில் ஒருவரான பிரிட்டோ அவர்களை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில், அந்த நியூஸ்கார்டை விகடன் வெளியிடவில்லை, அது போலியான நியூஸ்கார்ட் என்று பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலையைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். இதற்கு அவர், “இது பொய்யான செய்தி” என்று பதிலளித்தார்.
Also Read: இஸ்லாமிய மத உடை அணிந்து கேரள அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுனர்; வைரலாகும் தகவல் உண்மையானதா?
Conclusion
33 லட்சம் திருடியதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்புண்டு என்று யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: False/ Fabricated
Sources
Phone Conversation With Annamalai, Tamilnadu State President, BJP on 31 May 2022
Phone Conversation With Britto, Vikatan on 31 May 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)