சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact Checkஇந்திய ஒற்றுமை பயணத்தில் சபரிமலை போராளியை சந்தித்தாரா ராகுல் காந்தி?

இந்திய ஒற்றுமை பயணத்தில் சபரிமலை போராளியை சந்தித்தாரா ராகுல் காந்தி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின்போது  சபரிமலை போராளி ஒருவரை சந்தித்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின்போது  சபரிமலை போராளி ஒருவரை சந்தித்ததாக பரவும்  புகைப்படம்

சபரிமலையில் சிறுமிகள் மற்றும் முதியவர்களை தவிர்த்து வயதுவந்த மற்ற பெண்கள் செல்லக்கூடாது எனும் மரபு இருந்து வந்தது. இதை எதிர்த்து போராட்டங்கள் நடந்த நிலையில் அனைத்து பெண்களும் கோவிலுக்குள் நுழையலாம் என்று உச்சநீதி மன்றம் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

இருப்பினும் பெண்கள் சபரிமலையில் நுழைய முற்படும்போது தாக்குதலுக்கு உள்ளாகுவது, போராட்டங்கள் நடைபெறுவது என்பது தொடர்கதையாகவே உள்ளது. இந்நிலையில் இந்திய ஒற்றுமை பயணத்தின்போது  ராகுல் காந்தி  சபரிமலை போராளி ஒருவரை சந்தித்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின்போது  சபரிமலை போராளி ஒருவரை சந்தித்ததாக பரவும்  புகைப்படம் - 01
Screenshot from Facebook / seshadri.damodaran
ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின்போது  சபரிமலை போராளி ஒருவரை சந்தித்ததாக பரவும்  புகைப்படம் - 02
Screenshot from Facebook / kavithanatarajkavin
ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின்போது  சபரிமலை போராளி ஒருவரை சந்தித்ததாக பரவும்  புகைப்படம் - 03
Screenshot from Facebook / கிருஷ்ணன்

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்தாரா?

Fact Check/Verification

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின்போது  சபரிமலை போராளி ஒருவரை சந்தித்ததாக கூறி புகைப்படம் ஒன்று  வைரலானதைத் தொடர்ந்து, வைராகும் புகைப்படத்தில் ராகுல் காந்தியுடன் இருப்பவர் யார் என்பது குறித்து தேடினோம்.

இத்தேடலில் ராகுலடன் இருக்கும் அப்பெண்மணியின் பெயர் சஞ்சுக்தா பாசு என அறிய முடிந்தது. தனியார்  செய்தி இணையத்தளங்களில் இவரது கட்டுரைகள் சில வெளிவந்திருந்ததை காண முடிந்தது. இவருக்கும் சபரிமலை போராட்டங்களுக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என தேடியபோது, நேரடியாக இவர் களத்தில் போராடியதாக எந்த ஒரு செய்தியையும் காண முடியவில்லை. ஆனால் இவர் டிவிட்டரில் சபரிமலை போராட்டங்களுக்கு ஆதரவாக தொடர்ந்து டிவீட் செய்திருந்ததை காண முடிந்தது.

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின்போது  சபரிமலை போராளி ஒருவரை சந்தித்ததாக பரவும்  புகைப்படம் - 01\4
Screenshot of Sanjukta Basu’s Tweets regarding Sabarimala

இதனையடுத்து உண்மையாகவே ராகுல் காந்தி சஞ்சுக்தாவை இந்திய ஒற்றுமை பயணத்தின்போது சந்தித்தாரா என்பதை உறுதி செய்ய, வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் படத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் சஞ்சுக்தா பாசு அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியதிலிருந்தே அவர் குறித்தும், இப்பயணம் குறித்தும் பல பொய் செய்திகள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. அவற்றில் சிலவற்றை நமது நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.

  1. ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷமிட்ட பெண்ணை சந்தித்தாரா ராகுல் காந்தி?
  2. கர்நாடகாவில் நுழைந்தவுடன் இந்துக்கள் உடைக்கு மாறினாரா ராகுல் காந்தி?
  3. ராகுல் காந்தியின் செல்வாக்கு மற்ற தேசியத் தலைவர்களை காட்டிலும் அதிகரித்துள்ளது என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது பகிர்ந்து,  இந்திய ஒற்றுமை பயணத்தில் சபரிமலை போராளியை ராகுல் காந்தி சந்தித்ததாக தவறான தகவல் ஒன்றை பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகின்றது

Conclusion

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின்போது  சபரிமலை போராளி ஒருவரை சந்தித்ததாக கூறி வைரலாகும் புகைப்படம், கடந்த 2019 அல்லது அதற்கு முன் எடுக்கப்பட்ட பழைய படம் என்பதை நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக அறிய முடிகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Also Read: சென்னையில் கழிவுநீர் வடிகால் மேல் கட்டப்பட்டிருந்த பிளாட்ஃபார்ம் உடைந்து 5 பேர் சாக்கடைக்குள் விழுந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?

Result: Partly False

Sources

Tweet, from Sanjukta Basu on Jan 23, 2019


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular