சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeFact Checkஅரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் கடைகள்தான்; டாஸ்மாக்கை மூட சொல்வது நியாயமற்றது என்றாரா அமைச்சர்...

அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் கடைகள்தான்; டாஸ்மாக்கை மூட சொல்வது நியாயமற்றது என்றாரா அமைச்சர் செந்தில் பாலாஜி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் கடைகள்தான்; டாஸ்மாக்கை மூட சொல்வது நியாயமற்றது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் கடைகள்தான்; டாஸ்மாக்கை மூட சொல்வது நியாயமற்றது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு நியூஸ்கார்ட் ஒன்றை அனுப்பி, அதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார்.

அந்த நியூஸ்கார்டில், “அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் கடைகள்தான். டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாயில்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படுகின்றது. எனவே டாஸ்மாக் கடைகளை மூட சொல்வது நியாயமற்றது” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நியூஸ்கார்டை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் கடைகள்தான்; டாஸ்மாக்கை மூட சொல்வது நியாயமற்றது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 01
Screenshot from Facebook / vinod.pillai.376
அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் கடைகள்தான்; டாஸ்மாக்கை மூட சொல்வது நியாயமற்றது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 02
Screenshot from Facebook / mohan.babu.94064
அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் கடைகள்தான்; டாஸ்மாக்கை மூட சொல்வது நியாயமற்றது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 03
Screenshot from Facebook / சந்திரமோகன் அயக்கோடு

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராமநாதபுரத்தில் சித்தர் பறந்ததாக பரவும் வீடியோவின் உண்மை என்ன?

Fact Check/Verification

அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் கடைகள்தான்; டாஸ்மாக்கை மூட சொல்வது நியாயமற்றது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று  வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் ஏபிபி நாடின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி  உருவாக்கப்பட்டிருப்பதால், இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதா என அறிய, அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம்.  இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை ஏபிபி நாடு வெளியிட்டதற்கானக எந்த தரவும் கிடைக்கவில்லை.  

இதனையடுத்து ஏபிபி நாடின் ஆசிரியர் சண்முக சுந்தரத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்தோம். அவர் வைராலாகும் நியூஸ்கார்ட் போலியானது என தெளிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து திமுகவின் ஐடி விங்கை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில், இத்தகவல் பொய்யானது என அவர்கள் உறுதி செய்தனர்.

Also Read: மோர்பி பாலத்தை பிரதமர் பார்வையிட ₹30 கோடி செலவானது என்று ஆர்டிஐ தகவல் வெளியிட்டதா?

Conclusion

அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் கடைகள்தான்; டாஸ்மாக்கை மூட சொல்வது நியாயமற்றது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Phone Conversation with DMK IT Wing, on December 09, 2022
Phone Coversation with Shanmuga Sundaram, Editor, ABP Naadu, on December 09, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular