இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என NDTV கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி என்று NDTV கருத்துக்கணிப்பு வெளியிட்டதாகப் பரவுகின்ற புகைப்படம் போலியானதாகும்.

மலப்புரத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டதாக பரவும் தவறான புகைப்படம்!
மலப்புரத்தில் வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதாக வைரலாகும் படம் தவறானப் படமாகும்.

Fact Check: பாகிஸ்தானில் இறந்த மகள்கள் சமாதிக்கு பூட்டு போடும் பெற்றோர் எனப் பரவும் புகைப்படம் உண்மையா?
பாகிஸ்தானில் இறந்த மகள்களின் கல்லறைக்கு பூட்டு போட்ட பெற்றோர் என்று பரவும் புகைப்படம் ஹைதராபாத்தைச் சேர்ந்ததாகும்.

நியாயம் கேட்ட இளைஞரை தாக்கினாரா பிரிஜ் பூஷன் சரண் சிங்?
மல்யுத்த வீராங்கனைகளுக்காக நியாயம் கேட்ட இளைஞரை பிரிஜ் பூஷன் சரண் சிங் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ தவறானதாகும்.

Fact Check: நொச்சிக்குப்பம் மீன் விற்பனைக் கடைகள் இடிக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
நொச்சிக்குப்பம் மீன் விற்பனைக் கடைகள் இடிக்கப்பட்டதாகப் பரவும் படம், கடந்த 2019ஆம் ஆண்டு புகைப்படமாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)