இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.


கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாடப்பட்டதா?
கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியிடம் விசாரணை?
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டியிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததாக பரவும் நியூஸ்கார்டுகள் போலியானவை.

குளிர்பானங்கள் வழியாக எபோலா வைரஸ் பரவுவதாக வதந்தி!
குளிர்பானங்கள் வழியாக எபோலா வைரஸ் பரவுவதாக பரவும் தகவல் தவறானதாகும்.

மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று கேள்வி எழுப்பினாரா சென்னை மேயர் பிரியா?
மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)