வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact CheckFact Check: உத்திரப் பிரதேசத்தில் சிறுமிக்கு இரத்தம் ஏற்ற படுக்கை, ஸ்டாண்ட் இல்லை பரவும் படத்தின்...

Fact Check: உத்திரப் பிரதேசத்தில் சிறுமிக்கு இரத்தம் ஏற்ற படுக்கை, ஸ்டாண்ட் இல்லை பரவும் படத்தின் உண்மை பின்னணி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: உத்திரப் பிரதேச மருத்துவமனையில் சிறுமிக்கு இரத்தம் ஏற்ற படுக்கை, ஸ்டாண்ட் இல்லை

Fact: வைரலாகும் இந்நிகழ்வு நடந்தது உத்திரப் பிரதேசத்தில் அல்ல, மத்திய பிரதேசத்திலாகும்

‘8000 கோடிக்கு மோடிக்கு தனி விமானம் வாங்க பணம் இருக்கு 3 ஆயிரம் கோடியில் பட்டேல் சிலையை வைக்க பணம் இருக்கு உத்திர பிரதேச மருத்துவமனையில் ரத்தம் ஏற்றும் இந்த சிறுமிக்கு ஒரு படுக்கை, ஸ்டாண்ட் இல்லை’ என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றத.

அப்படத்தில், தாய் ஒருவர் இரத்தப் பையுடன் நிற்க, சிறுமி ஒருவர் தரையில் அமர்ந்து, அவருக்கு இரத்தம் ஏறி கொண்டிருப்பதாய் இருந்தது.

உத்திரப் பிரதேச மருத்துவமனையில் சிறுமிக்கு இரத்தம் ஏற்ற படுக்கை, ஸ்டாண்ட் இல்லை என்று  வைரலாகும் தகவல்
Screengrab from Twitter@SJB56856832
உத்திரப் பிரதேச மருத்துவமனையில் சிறுமிக்கு இரத்தம் ஏற்ற படுக்கை, ஸ்டாண்ட் இல்லை என்று  வைரலாகும் தகவல்
Screengrab from Facebook/Nilexon
உத்திரப் பிரதேச மருத்துவமனையில் சிறுமிக்கு இரத்தம் ஏற்ற படுக்கை, ஸ்டாண்ட் இல்லை என்று  வைரலாகும் தகவல்
Screengrab from Facebook/waheedurr

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact check: பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Factcheck / Verification

உத்திரப் பிரதேச மருத்துவமனையில் சிறுமிக்கு இரத்தம் ஏற்ற படுக்கை, ஸ்டாண்ட் இல்லை  என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அப்படத்தின் உண்மைத்தனமை குறித்து அறிய, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்து அதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலானது,Woman Holds Blood Bag For Transfusion As Daughter Sits On Hospital Floor’ என்று தலைப்பிட்டு செப்டம்பர் 15, 2022 அன்று NDTV வெளியிட்ட  செய்திக்கு நம்மை அழைத்துச் சென்றது. இச்செய்தியில் இச்சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்ததாக தெரிவிக்கப்பப்பட்டிருநதது.

மத்தியப் பிரதேசத்தின் சாத்னா நகரத்திற்குட்பட்ட மெய்ஹர் சிவில் மருத்துவமனைக்கு சந்தோஷி கேவத் எனும்சிறுமி தன் தாயுடன் சென்றுள்ளார். ஹீமோகுளோபின் குறைபாடுள்ள இவருக்கு இரத்தம் ஏற்ற போதுமான படுக்கை வசதி இல்லை என்று மருத்துவமனை தரப்பில் கூற, அவரது தாய் இரத்தைப் பையை கையில் ஏந்தியபடி நிற, தரையில் அமர்ந்து இவர் இரத்தம் ஏற்றியுள்ளார்.

இந்த தகவல்  சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, மெய்ஹர் மருத்துவமனைக்கு பொறுப்பாளராக இருந்த மருத்துவருக்கு ஒரு சம்பள உயர்வும், உடன் இருந்த செவிலியருக்கு இரண்டு சம்பள உயர்வும் தடுக்கப்பட்டுள்ளதாக இச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருநதது.

உத்திரப் பிரதேச மருத்துவமனையில் சிறுமிக்கு இரத்தம் ஏற்ற படுக்கை, ஸ்டாண்ட் இல்லை என்று  வைரலாகும் தகவல்
Screengrab from NDTV

தொடர்ந்து தேடுகையில் மேலும் சில ஊடகங்களில் இச்செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது. அவற்றை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

கிடைத்த ஆதாரங்களின அடிப்படையில் காண்கையில் வைரலாகும் படத்தில் காணப்படும் நிகழ்வு உத்திரப் பிரதேசத்தில் நடக்கவில்லை, மத்திய பிரதேசத்தில் நடந்தது என்பது தெளிவாகின்றது.

Also Read: Fact check: 2016 சட்டமன்றத் தேர்தலில் சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சைமன் என்று கையொப்பமிட்டாரா?

Conclusion

சிறுமிக்கு இரத்தம் ஏற்ற படுக்கை, ஸ்டாண்ட் இல்லை என்று குறிப்பிட்டு வைரலாகும் தகவல் உண்மையானதுதான். ஆனால் இந்நிகழ்வு உத்திரப் பிரதேசத்தில் நடக்கவில்லை, மத்தியப் பிரதேசத்தில் நடந்ததாகும்.

இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources

Report from NDTV Dated September 15, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular