ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 6, 2024
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 6, 2024

HomeFact Checkரஜினிகாந்த் கையில் மதுபானத்துடன் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துகொண்டாரா?

ரஜினிகாந்த் கையில் மதுபானத்துடன் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துகொண்டாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ரஜினிகாந்த் கையில் மதுபானத்துடன் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துகொண்டார்.

Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையில் ரஜினிகாந்து கையில் வைத்திருந்தது மதுபானமல்ல, குளிர்பானமாகும்.

“சிறுவன் முன்னாடி மதுபானத்தை கையில் வைத்திருக்கும் வந்தேறி ரஜினி” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கையில் பானம் ஒன்றை வைத்துக்கொண்டு சிறுவன் ஒருவருடன் புகைப்படத்திற்கு காட்சி கொடுப்பதாக இருந்தது.

ரஜினிகாந்த் கையில் மதுபானத்துடன் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக பரவும் புகைப்படம்

X Link | Archive Link

ரஜினிகாந்த் கையில் மதுபானத்துடன் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக பரவும் புகைப்படம்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று நியூஸ்கார்ட் வெளியிட்டதா புதியதலைமுறை?

Fact Check/Verification

ரஜினிகாந்த் கையில் மதுபானத்துடன் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் “சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் போஸ் கொடுத்திருக்கும் அந்த சிறுவயது முன்னணி நடிகர் யாரென்று தெரிகிறதா?” என்று தலைப்பிட்டு சினி உலகம் வெளியிட்டிருந்த கட்டுரையில் நடிகர் ஜீவா சிறு வயதில் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்டதாக கூறி வைரலாகும் படத்தை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

ஆனால் அப்படத்தில் ரஜினிகாந்த் கையில் மதுபான இல்லை. மாறாக பெப்ஸி டின் வகை குளிர்பானமே இருந்தது.

ரஜினிகாந்த் கையில் மதுபானத்துடன் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக பரவும் புகைப்படம்
Screengrab from Cineulagam

இதனை தொடர்ந்து தேடுகையில் நடிகர் ஜீவாவும் 2012, 2022 ஆண்டுகளில் இப்படத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதை காண முடிந்தது. அப்படங்களிலும் ரஜினிகாந்த் கையில் பெப்ஸி குளிர்பானமே இருந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் ரஜினி கையிலிருந்த குளிர்பான டின்னை எடிட் செய்து மாற்றி, அதற்கு பதிலாக அவர் கையில் மதுபானம் இருப்பதாக வைரலாகும் படத்தை உருவாக்கியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: இந்தியாவிலிருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக வருத்தமுற்றார்களா?

Conclusion

ரஜினிகாந்த் கையில் மதுபானத்துடன் சிறுவனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படமாகும். உண்மையில் ரஜினிகாந்து கையில் வைத்திருந்தது மதுபானமல்ல, குளிர்பானமாகும்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Report from Cineulagam
X post from Actor Jeeva, Dated December 12, 2012

X post from Actor Jeeva, Dated December 12, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular