திங்கட்கிழமை, மே 20, 2024
திங்கட்கிழமை, மே 20, 2024

HomeFact Checkசீரடி சாய்பாபா டிரஸ்ட் முஸ்லீம்களின் ஹஜ் யாத்திரைக்கு ₹35 கோடி நன்கொடையாக அளித்ததா?

சீரடி சாய்பாபா டிரஸ்ட் முஸ்லீம்களின் ஹஜ் யாத்திரைக்கு ₹35 கோடி நன்கொடையாக அளித்ததா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: சீரடி சாய்பாபா டிரஸ்ட் முஸ்லீம்களின் ஹஜ் யாத்திரைக்கு ₹35 கோடி நன்கொடையாக அளித்தது.

Fact: சீரடி சாய்பாபா கோவிலின் டிரஸ்ட் நிர்வாகம் இதை மறுத்துள்ளது.

சீரடி சாய் டிரஸ்ட் ஹஜ் கமிட்டிக்கு ₹35 கோடி நன்கொடை செய்ததாக கூகுளில் தேடிய புகைப்படதுடன், “ஷீரடி சாய்பாபா டிரஸ்ட் .. முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்காக 35 கோடி நன்கொடை. ஒரு வேளை பூஜைக்கே வழியில்லாத ஏழை இந்துக்கோவில்களுக்கு கூட இப்படி கொடுக்கவில்லையே …ஏன்? இப்போதாவது சிந்தியுங்கள்… சாய்பாபா என்பது இந்துக்களை ஏமாற்ற நடத்தப்படும் ஆன்மீக ஜிஹாத்” என்கிற வாசகங்களும் அடங்கிய புகைப்படம் ஒன்றை வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ் ஆப் ஹெல்ப்லைன் எண்ணில் (+91 9999499044) அனுப்பி இதுக்குறித்து நம்மிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

சீரடி சாய்பாபா டிரஸ்ட் முஸ்லீம்களின் ஹஜ் யாத்திரைக்கு ₹35 கோடி நன்கொடை
Screengrab from Newschecker WhatsApp tipline

இதுக்குறித்து தேடுகையில் இத்தகவலானது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருவதை காண முடிந்தது.

சீரடி சாய்பாபா டிரஸ்ட் முஸ்லீம்களின் ஹஜ் யாத்திரைக்கு ₹35 கோடி நன்கொடை

Facebook Link

சீரடி சாய்பாபா டிரஸ்ட் முஸ்லீம்களின் ஹஜ் யாத்திரைக்கு ₹35 கோடி நன்கொடை

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்தியா கூட்டணி 304 இடங்களை பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா இந்தியா டுடே?

Fact Check/Verification

சீரடி சாய்பாபா டிரஸ்ட் முஸ்லீம்களின் ஹஜ் யாத்திரைக்கு ₹35 கோடி நன்கொடையாக அளித்ததாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து ஊடகங்களில் இதுக்குறித்து தகவல் உள்ளதா என இணையத்தில் தேடினோம்.

இத்தேடலில் சாய் பாபா டிரஸ்ட் நன்கொடை கொடுத்ததாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. மாறாக வைரலாகும் இச்செய்திக்கு சாய் பாபா டிரஸ்ட் மறுப்பு தெரிவித்த செய்தி ஒன்று ஈடிவி பாரத்தில் வெளிவந்திருந்ததை காண முடிந்தது.

சீரடி சாய்பாபா டிரஸ்ட் முஸ்லீம்களின் ஹஜ் யாத்திரைக்கு ₹35 கோடி நன்கொடை
Screengrab from ETV Bharat website translated to English from Marathi by Google

அச்செய்தியில் சாய் பாபா கோவில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராகுல் ஜாதவ், “சாய் நிறுவனத்தில் இதுபோன்ற நன்கொடைகள் தருவதற்கு வழியில்லை. மேலும் எங்களிடம் யாரும் நன்கொடையும் கேட்கவில்லை. ஆகையால் நன்கொடை கொடுத்ததாக, மறுத்ததாகவோ எழுப்பப்படும் கேள்விகளுக்கு இடமில்லை. இதுப்போன்ற தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சீரடி சாய்பாபா டிரஸ்ட் முஸ்லீம்களின் ஹஜ் யாத்திரைக்கு ₹35 கோடி நன்கொடை
Screengrab from ETV Bharat website translated to English from Marathi by Google

இதனையடுத்து சாய் பாபா கோவில் டிரஸ்டின் மக்கள் தொடர்பு அதிகாரியை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக்கொண்டு விசாரிக்கையில், அவரும் ‘வைரலாகும் இத்தகவல் பொய்யானது, ஹஜ் கமிட்டிக்கு எந்த ஒரு நன்கொடையும் வழங்கவில்லை’ என்று பதிலளித்தார்.  

 Also Read: மோடியின் உருவபொம்மையை எரித்த காங்கிரஸ் கட்சியினர் வேட்டியில் தீப்பிடித்ததா?

Conclusion

சீரடி சாய்பாபா டிரஸ்ட் முஸ்லீம்களின் ஹஜ் யாத்திரைக்கு ₹35 கோடி நன்கொடையாக அளித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.

Result: False

Our Sources
Report By ETV Bharat, Dated April 24, 2023
Conversation With RPO Of Shirdi Sai Temple Trust


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular