திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkமாநில அரசின் திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் 10 சதவீதம் TDS பிடிக்கப்படும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

மாநில அரசின் திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் 10 சதவீதம் TDS பிடிக்கப்படும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மாநில அரசின் திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் 10 சதவீதம் TDS பிடிக்கப்படும் – நிர்மலா சீதாராமன்

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.

முந்தைய நேற்று (11/07/2023) 50-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கவுன்சிலில் குதிரைப் பந்தையம், ஆன்லைன் ரம்மி உள்ளிட்டவற்றுக்கு 28 சதவீதம் வரி, புற்றுநோய் உள்ளிட்ட அரிய வகை நோய்களின் மருந்துகளுக்கு வரி கிடையாது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், “மாநில அரசின் நலத்திட்டங்கள் ரொக்கத் தொகையாக வழங்கப்பட்டால் TDS ஆக 10 சதவீதம் பிடித்தம் செய்த பிறகே வழங்கப்படவேண்டும்” என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மாநில அரசின் திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் 10 சதவீதம் TDS பிடிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter@ArasiyalKadai

Twitter Link | Archived Link

மாநில அரசின் திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் 10 சதவீதம் TDS பிடிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/ArunJeevaRaja

Archived Link

மாநில அரசின் திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் 10 சதவீதம் TDS பிடிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/mustafa.gingee

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்திய ராணுவத்தின் ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனரா?

Fact Check/Verification

மாநில அரசின் திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் 10 சதவீதம் TDS பிடிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக கடந்த செவ்வாய் கிழமை நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ளதுபோல் ஏதாவது அறிவிப்பு வெளியிடப்பட்டதா என நிதியமைச்சகம் வெளியிட்ட செய்தி வெளியீட்டில் தேடினோம். அச்செய்தி வெளியீட்டில் இவ்வாறு ஒரு முடிவு எடுத்ததாக எந்த தகவலும் காணப்படவில்லை.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் ‘ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் பந்தய விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி’ என்று நிர்மலா சீதாராமன் அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்றை புதிய தலைமுறை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.

Also Read: ஓடாத ரயிலை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்தனரா ராணுவ ஜவான்கள்?

Conclusion

மாநில அரசின் திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் 10 சதவீதம் TDS பிடிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from Puthiya Thalaimurai, Dated July 11, 2023

Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai
Press Release from Ministry of Finance


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular