திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkதமிழகத்தில் 400 சதவீதம் ஊழல் அதிகரிப்பு; வைரலாகும் நியூஸ்கார்டு உண்மையானதா?

தமிழகத்தில் 400 சதவீதம் ஊழல் அதிகரிப்பு; வைரலாகும் நியூஸ்கார்டு உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமிழகத்தில் 400 சதவீதம் ஊழல் அதிகரிப்பு

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது.

“3 ஆண்டுகளில் தமிழகத்தில் ஊழல் 400 சதவீதம் அதிகரித்துள்ளது.. “தி சீக்ரெட்” என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் அதிர்ச்சி தகவல்!” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

தமிழகத்தில் 400 சதவீதம் ஊழல் அதிகரித்துள்ளதாக பரவும் நியூஸ்கார்டு

X Link | Archived Link

தமிழகத்தில் 400 சதவீதம் ஊழல் அதிகரித்துள்ளதாக பரவும் நியூஸ்கார்டு

Facebook Link

தமிழகத்தில் 400 சதவீதம் ஊழல் அதிகரித்துள்ளதாக பரவும் நியூஸ்கார்டு

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விவசாயிகள் தேசியக்கொடியை அவமதித்ததாக பரவும் கனடா வீடியோ!

Fact Check/Verification

தமிழகத்தில் 400 சதவீதம் ஊழல் அதிகரித்துள்ளதாக தி சீக்ரெட் எனும் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளதாக தகவல் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முதலில் ஊழல் குறித்த கணக்குகளை கருத்துக்கணிப்பின் வாயிலாக அறிய முடியாது. அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத் துறை போன்ற நிதி தொடர்பான நிறுவனங்களாலேயே இது தொடர்பான கணக்குகளை கொடுக்க முடியும்.

இருப்பினும் இந்த தகவலை பலர் பகிர்ந்து வருவதால் இத்தகவலில் குறிப்பிட்டுள்ள தி சீக்ரெட் எனும் அமைப்பு உண்மையிலேயே உள்ளதா என தேடினோம். அதில் இப்பெயரில் எந்த ஒரு அமைப்பும் இருப்பதாக நமக்கு தரவுகள் கிடைக்கவில்லை.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் ‘எம்.பி. தொகுதிகளில் திமுக பொதுக்கூட்டம்’ என்று தலைப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்றை புதிய தலைமுறை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று பதிலளித்தார்

 Also Read: இஸ்லாமிய எம்.எல்.ஏ போலீசாரை தாக்கியதாக பரவும் தவறான வீடியோத் தகவல்!

Conclusion

தமிழகத்தில் 400 சதவீதம் ஊழல் அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டு போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation With Ivany, Digital Head, Puthiya Thalaimurai

Tweet from Puthiya Thalaimurai, Dated February 11, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular