திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkராகுல் காந்தி வயலில் தாமரைப்பூக்களை நடுவதாகப் பரவும் எடிட் புகைப்படம்!

ராகுல் காந்தி வயலில் தாமரைப்பூக்களை நடுவதாகப் பரவும் எடிட் புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: வயலில் தாமரைப்பூக்களை நடும் ராகுல் காந்தி
Fact: வைரலாகும் புகைப்படம் ராகுல் காந்தி நாற்று நடும் புகைப்படத்தை எடுத்து எடிட் செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி வயலில் தாமரைப்பூக்களை நடுவதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

“கடவுள் எனும் முதலாளி… கண்டெடுத்த தொழிலாளி. விவசாயி … விவசாயி…. இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி … எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி … பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி … அது பஞ்சம் இல்லை என்னும் பாரத கொடி” என்று இந்த புகைப்படம் வைரலாகிறது.

Screenshot from X @BS_Prasad

Archived Link

Screenshot from X @vanamadevi

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக பரவும் எடிட் படம்!

Fact Check/Verification

ராகுல் காந்தி வயலில் தாமரைப்பூக்களை நடுவதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச்  முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடிட் செய்து இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது நமக்குத் தெரிய வந்தது.

ராகுல் காந்தி தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்திலும் இப்புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், அவர் வயலில் இறங்கி நாற்றுகளையே நடுகிறார். ஹரியானாவில் விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களுடன் இணைந்து நாற்று நடவில் அவர் ஈடுபட்டப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்பதும் உறுதியாகியது.

மேலும், ”Rahul Gandhi plants paddy saplings, interacts with farmers in Haryana’s Sonepat; see video” என்று கடந்த ஜூலை 2023ல் இதுகுறித்த செய்திகளிலும் ராகுல் காந்தி நாற்று நடும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட புகைப்படத்தை எடுத்தே அதில் தாமரைப்பூக்களை எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பது நமக்கு உறுதியாகியது.

 Also Read: பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்றாரா அண்ணாமலை?

Conclusion

ராகுல் காந்தி வயலில் தாமரைப்பூக்களை நடுவதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Report from tribuneindia, Dated July 16, 2023
X Post from Rahul Gandhi, Dated July 16, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular