சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact CheckFact Check: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் அமர் பிரசாத் ரெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதா?

Fact Check: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் அமர் பிரசாத் ரெட்டிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim 1: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் பாஜக நிர்வாகி அலெக்ஸ் ஒப்புதல் வாக்குமூலம்
Fact: ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றே அலெக்ஸ் விசாரணையில் கூறியுள்ளார்

Claim 2: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் அமர் பிரசாத் ரெட்டிக்கு சம்மன்
Fact: இத்தகவல் பொய்யானது என்று அமர் பிரசாத் ரெட்டி மறுத்துள்ளார்

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் பாஜக நிர்வாகி அலெக்ஸ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும், பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு அணியின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியதாகவும் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு
Screengrab from Facebook/gobinath.gobi.184
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு
Screengrab from Facebook/Kamakshi Kamakshidmk

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விவேகானந்தரின் தத்துவத்தால் கவரப்பட்டு டாட்டா நிறுவனத்தை ஜாம்செட்ஜி டாடா உருவாக்கினார் என்று பிரதமர் பேசியதாக பரவும் தவறான தகவல்!

Factcheck / Verification

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் பாஜக நிர்வாகி அலெக்ஸ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும், அமர் பிரசாத் ரெட்டியை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியதாகவும் நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக, வைரலாகும் நியூஸ்கார்ட் தந்தி தொலைக்காட்சியின் லோகோவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால், அந்நிறுவனம் இதை வெளியிட்டதா என அந்நிறுவனத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் ஆராய்ந்தோம். இதில் அந்நிறுவனம் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவை சார்ந்த வினோத் குமாரை தொடர்புக் கொண்டு விசாரிக்கையில், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, தந்தி தொலைக்காட்சி இதை வெளியிடவில்லை என்று அவர் தெளிவு செய்தார்.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள தகவல் குறித்த விசாரணையை மேற்கொண்டோம். முன்னதாக பாஜக நிர்வாகி அலெக்ஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாரா என ஆராய்ந்தோம். அதில் இத்தகவல் பொய்யானது என அறிய முடிந்தது.

பாஜக நிர்வாகி அலெக்ஸ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின்  விசாரணைக்குப்பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அச்சந்திப்பில் ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என போலீசாரிடம் கூறியதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அமர் பிரசாத் ரெட்டியை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அதற்கு அவர், “இது பொய்யான தகவல், சம்மன் ஏதும் தனக்கு வரவில்லை”  என்று பதிலளித்தார்.

Also Read: Fact Check: பிரதமர் மோடியின் 1983ஆம் வருட MA டிகிரியில் 1981ல் இறந்த துணை வேந்தர் கையெழுத்திட்டாரா?

Conclusion

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் பாஜக நிர்வாகி அலெக்ஸ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகவும், அமர் பிரசாத் ரெட்டியை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானதாகும்.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Youtube video from Sun News, Dated April 13, 2023
Phone Conversation with Amar Prasad Reddy, State President, Sports and Skill Development Cell, Tamilnadu BJP, Dated April 13, 2023
Phone Conversation with Vinoth kumar, Thanthi TV, Dated April 13, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular