சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Check1400 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் கட்டிய கோயிலில் கணிணி சிற்பம் உள்ளதா?

1400 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் கட்டிய கோயிலில் கணிணி சிற்பம் உள்ளதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

1400 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் கட்டிய கோயிலில் கணிணி சிற்பம் உள்ளதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

1400 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் கட்டிய கோயிலில் கணிணி சிற்பம் உள்ளதாக பரவும் தகவல்

“1400 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மனால் கட்டப்பட்ட தாளகிரி சிவாலயத்தில் கம்ப்யூட்டர் மற்றும் கீ போர்டுடன் ஒரு சிற்பம் கல்லிலே சுவற்றில் உள்ளது” என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

1400 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் கட்டிய கோயிலில் கணிணி சிற்பம் உள்ளதாக பரவும் தகவல் - 01

Twitter Link | Archive Link

1400 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் கட்டிய கோயிலில் கணிணி சிற்பம் உள்ளதாக பரவும் தகவல் - 02

Facebook Link

1400 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் கட்டிய கோயிலில் கணிணி சிற்பம் உள்ளதாக பரவும் தகவல் - 03

Facebook Link

Also Read: ஸ்மிருதி இராணி மகளின் உணவகத்தில் மாட்டுக்கறி விற்பனை செய்யப்படுவதாக பரவும் புகைப்படத்தின் பின்னணி!

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

1400 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் கட்டிய கோயிலில் கணிணி சிற்பம் இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து,  அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் புகைப்படத்திலிருக்கும் சிற்பம் உண்மையானது அல்ல, அது கற்பனையாக வரையப்பட்ட ஒவியம் என்பதை அறிய முடிந்தது. ராவ்ல் க்ரூஸ் எனும் மெக்ஸிகன் ஓவியர் வரைந்த எதிர்கால மூதாதையர்கள் ஓவியமே பல்லவ சிற்பம் என்று கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

Strangehorizon.Com
Screenshot of Strangehorizon.Com

ராவ்ல் க்ரூஸின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வைரலாகும் படம் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.

Instagram will load in the frontend.

 “Cosmos Latinos: An Anthology of Science Fiction from Latin America and Spain” எனும் அறிவியல் புனைவு புத்தகத்தில் அட்டைப்படமாக வைரலாகும் படம் இடம்பெற்றிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது.

Amazon.Com
Screenshot of Amazon.Com

Also Read: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எளிமையாக இருப்பதாக வைரலாகும் படத்தின் உண்மை பின்னணி!

Conclusion

1400 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் கட்டிய கோயிலில் கணிணி சிற்பம் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: False

Sources

Raul Cruz’s instagram post
Artice Published on strangehorizon.com
Frontpage of Cosmos Latinos: An Anthology of Science Fiction from Latin America and Spain


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular