ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkஇங்கிலாந்து ராணி குடும்பத்தினரைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டாரா அ.ராசா?

இங்கிலாந்து ராணி குடும்பத்தினரைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டாரா அ.ராசா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

இங்கிலாந்து ராணி குடும்பத்துடன் நெருக்கமாக திமுக எம்பி அ.ராசா புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் என்பதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து
Source: Facebook

திமுகவின் நீலகிரி தொகுதி எம்.பியும், மிகப்பிரபலமான அரசியல்வாதியுமானவர் அ.ராசா. வழக்கறிஞரான இவர், மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக காங்கிரஸ் கூட்டணியில் பதவி வகித்தபோது 2ஜி அலைக்கற்றை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர், கடும் சட்டப்போராட்டத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். தற்போது மீண்டும் நீலகிரி தொகுதியில் இருந்து போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார்.

இந்நிலையில், “அடப்பாவிங்களா இங்கிலாந்து ராணிட்ட நெருங்குற அளவுக்கு என்னய்ய Business? 2G லாபம் அரச குடும்ப நெருக்கம் அளவுக்கு ஜாஸ்தியோ ? கோபாலபுரம் விரட்டி அடித்தாலும் விக்டோரியா புரம் வரவேற்கிறதே! ” என்கிற பதிவு ஒன்றினை பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர், அ.ராசா இங்கிலாந்து ராணி குடும்பத்துடன் நிற்பது போன்ற புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

இங்கிலாந்து
Source: Twitter
Source: Twitter

அதனை பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் ஒரு டிக்கெட் விலை 2925 ரூபாய் என்று பரவும் புகைப்படத்தின் பின்னணி என்ன?

Fact check/ Verification

இங்கிலாந்து ராணி குடும்பத்துடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்ட அ.ராசா என்பதாகப் பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

அதன்படி, அ.ராசா, தனது மகள் மயூரி ராசாவுடன் அவரது மேற்படிப்பு தொடர்பாக லண்டன் குயின் மேரி பல்கலைகழகத்திற்கு கடந்த மாதம் சென்றுள்ளார்.

அப்போது, அங்கு புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினரின் மெழுகு சிலைகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

இங்கிலாந்து

இது குறித்து திமுக எம்.பி அ.ராசாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “நான் புகைப்படம் எடுத்துக் கொண்டது வெறும் மெழுக்குச்சிலைகள். அதனையே நான் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக பரப்பி வருகின்றனர்” என்று சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.

அ.ராசா குறிப்பிட்ட அப்புகைப்படத்தையே அவர் இங்கிலாந்து ராணி குடும்பத்துடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டுள்ளார் என்பதாக தவறாக பரப்பி வருகின்றனர். மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள இங்கிலாந்து ராணி குடும்பத்தினரின் மெழுகு சிலைகள் குறித்த இணைப்பையும் இங்கே இணைத்துள்ளோம்.

Conclusion:

இங்கிலாந்து ராணி குடும்பத்துடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்ட அ.ராசா என்பதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:

Madam tussaudes

Twitter

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular