வெள்ளிக்கிழமை, மே 3, 2024
வெள்ளிக்கிழமை, மே 3, 2024

HomeFact Checkமோடியை விமர்சித்தால் உங்கள் சேனல் இருக்காது என்று மிரட்டினாரா அண்ணாமலை?

மோடியை விமர்சித்தால் உங்கள் சேனல் இருக்காது என்று மிரட்டினாரா அண்ணாமலை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மோடியை விமர்சித்தால் உங்கள் சேனல் இருக்காது என்று பத்திரிக்கையாளர்களை மிரட்டினார் அண்ணாமலை

Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையில்  ஊழல்களை செய்தியாக கொண்டு வந்தால் உங்கள் சேனல் அரசு கேபிள் விஷனிலிருந்து ஆளும் கட்சியால் நீக்கப்படும் என்றே அண்ணாமலை பேசியுள்ளார்.

பிரதமர் மோடியை விமர்சித்தால் உங்கள் சேனல் இருக்காது என்று பத்திரிக்கையாளர்களை அண்ணாமலை மிரட்டியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

மோடியை விமர்சித்தால் உங்கள் சேனல் இருக்காது என்று பத்திரிக்கையாளர்களை அண்ணாமலை மிரட்டியதாக பரப்பப்படும் வீடியோ

X Link | Archive Link

மோடியை விமர்சித்தால் உங்கள் சேனல் இருக்காது என்று பத்திரிக்கையாளர்களை அண்ணாமலை மிரட்டியதாக பரப்பப்படும் வீடியோ

Archive Link

மோடியை விமர்சித்தால் உங்கள் சேனல் இருக்காது என்று பத்திரிக்கையாளர்களை அண்ணாமலை மிரட்டியதாக பரப்பப்படும் வீடியோ

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதா?

Fact Check/Verification

மோடியை விமர்சித்தால் உங்கள் சேனல் இருக்காது என்று பத்திரிக்கையாளர்களை அண்ணாமலை மிரட்டியதாக பரப்பப்படும் வீடியோவில் ‘மோடியை விமர்சித்தால்’ எனும் வார்த்தைகளையே அண்ணாமலை பேசி இருக்கவில்லை. இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே வைர்லாகும் வீடியோவில் காணப்படும் பத்திரிக்கையாளர் சந்திப்பு குறித்து இணையத்தில் தேடினோம்.

இத்தேடலில் தந்தி தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் நேற்று (11/04/2024) இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் முழுப்பகுதி பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. இவ்வீடியோவை கூர்மையாக ஆராய்கையில் 23:03 நேரத்தில் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை நோக்கி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு ஊழல் குற்றச்சாட்டுகுறித்து கண்டறிந்து செய்தியாக வெளியிட்டுள்ளீர்களா என்று கேள்வி கேட்பதை காண முடிந்தது.

தொடர்ந்து அண்ணாமலை பேசுகையில் (24:12 நேரத்தில்) தமிழ்நாடு பத்திரிக்கையாளர் யாராவது தைரியமாக ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டறிந்து வெளியிட்டால் அடுத்தநாள் உங்கள் சேனல் டாடா ஸ்கை மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் விஷனிலிருந்து சேனல் நீக்கப்படும் என்று அண்ணாமலை பேசுவதை காண முடிந்தது.

தொடர்ந்து அவர் பேசுகையில் திமுக அமைச்சர் குறித்து ஊழல் குற்றச்சாட்டடை எந்த ஊடகமாவது வைத்தால் அவர்களுக்கு DIPR (Department of Information and Public Relations),  அதாவது செய்தி மக்கள் தொடர்புத் துறையிலிருந்து மிரட்டல் வரும். பின்பு முதல் எச்சரிக்கையாக அரசு கேபிள் விஷனில் அந்த சேனல் பின்னுக்கு தள்ளப்படும். இரண்டாவது எச்சரிக்கையாக மொத்தமாகவே அந்த சேனலே நீக்கப்படும் என்று அண்ணாமலை பேசி இருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் மேலும் சில ஊடகங்கள் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது, அவற்றிலும் மேற்காணும் கருத்தையே அண்ணாமலை பேசி இருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

இதனடிப்படையில் பார்க்கையில் அண்ணாமலை பேசியதில் முன்னும் பின்னும் நீக்கிவிட்டு அவர் பேசாத கருத்தை பேசியதாக பொய்யான தகவல் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது என்பது நமக்கு தெளிவாகின்றது.

 Also Read: கர்நாடகாவில் ரதம் செல்லும் வழியில் காரை நிறுத்திய இஸ்லாமியர் என்று பரவும் தவறான தகவல்!

Conclusion

மோடியை விமர்சித்தால் உங்கள் சேனல் இருக்காது என்று பத்திரிக்கையாளர்களை அண்ணாமலை மிரட்டியதாக பரப்பப்படும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையில் ஊழல்களை செய்தியாக கொண்டு வந்தால் அரசு கேபிள் விஷனிலிருந்து அச்செய்தியை வெளியிடும் ஊடகத்தின் சேனல் ஆளும் கட்சியால் நீக்கப்படும் என்றே அண்ணாமலை பேசியுள்ளார்.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Video

Our Sources
Youtube video from Thanthi TV, Dated April 11, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular