வியாழக்கிழமை, மே 2, 2024
வியாழக்கிழமை, மே 2, 2024

HomeFact Checkராமநாதபுரத்தை பாவபூமி என்றாரா பிரதமர் மோடி?

ராமநாதபுரத்தை பாவபூமி என்றாரா பிரதமர் மோடி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ராமநாதபுரத்தை பாவபூமி என்றார் பிரதமர் மோடி.

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியாக எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.

“”ஸ்ரீராம பெருமான் பாப விமோசனம் பெற்ற ராமநாதபுரம் இன்று ராவணர்களின் பூமியாக, தேச விரோதிகளின் பூமியாக இருக்கிறது. அந்த பாவ பூமியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட விரும்பவில்லை என்பதாலயே ராமநாதபுரத்தில் போட்டியிடவில்லைஎன்று உத்திரப்பிதேசத்தில் பிரதமர் மோடி பேசியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

ராமநாதபுரத்தை பாவபூமி என்று பிரதமர் மோடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

X Link | Archive Link

ராமநாதபுரத்தை பாவபூமி என்று பிரதமர் மோடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

Archive Link

ராமநாதபுரத்தை பாவபூமி என்று பிரதமர் மோடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதா?

Fact Check/Verification

ராமநாதபுரத்தை பாவபூமி என்று பிரதமர் மோடி கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் காங்கிரஸ் ராமரை இழிவுபடுத்தியிருக்கிறது – பிரதமர் மோடி என்று தலைப்பிட்டுநியூஸ்கார்ட் ஒன்றை புதிய தலைமுறை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அக்கார்டில்,ராமர் கோயில் நிகழ்ச்சிக்கான அழைப்பை புறக்கணித்ததன் மூலம், காங்கிரஸ் ராமரை இழிவுபடுத்தியிருக்கிறது” என்று உத்திரப்பிதேசத்தில் மோடி பேசியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.

இதனையடுத்து தேடுகையில் புதிய தலைமுறை இணையத்தளத்திலும் ‘இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை’ என்று வைரலாகும் இச்செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதை காண முடிந்தது.

ராமநாதபுரத்தை பாவபூமி என்று பிரதமர் மோடி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

 Also Read: கர்நாடகாவில் ரதம் செல்லும் வழியில் காரை நிறுத்திய இஸ்லாமியர் என்று பரவும் தவறான தகவல்!

Conclusion

ராமநாதபுரத்தை பாவபூமி என்று பிரதமர் மோடி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from Puthiya Thalaimurai, Dated April 09, 2024
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai
Report from Puthiya Thalaimurai, Dated April 11, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular